நிலத்தில் நிலக்குத்தாக குத்தப்பட்டிருந்த அலவாங்கின் மீது, மரத்திலிருந்து தவிறிவிழுந்த மாணவன், நெஞ்சுப் பகுதியில் குத்திய அலவாங்குடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவம், புளத்சிங்கள பிரதேசத்தில் இடம்பெற்றது.
அந்த அலவாங்கு மாணவனின் நெஞ்சுப் பகுதியையே பதம்பார்த்துள்ளது. சம்பவத்தையடுத்து அவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அலவாங்கு அகற்றப்படாமல் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


0 Comments