Subscribe Us

header ads

இன்று வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் வாழ்த்து

அபு அலா -

இன்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அம்மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று (07) விடுத்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அந்த வாழ்த்துச் செய்தியில்,

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை நாம் எந்தளவிற்கு பாராட்டுகின்றோமோ அதேயளவு பரீட்சைக்கு தோற்றிய அணைத்து மாணவர்களையும் பாராட்டி அவர்களுக்கு உற்சாகமளிக்க வேண்டும். பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை குறைசொல்வதோ அல்லது அவர்களுடைய மனதை பாதிக்கும் வகையில் பெற்றோர்களோ அல்லது கல்வி கற்பித்துக் கொடுத்த ஆசிரியர்களோ நடந்து கொள்ளக்கூடாது.

இந்த சின்னஞ்சிறு வயதில் எவ்வித அச்சமின்றி இந்த பரீட்சைக்கு தோற்றுவதை நாம் வரவேற்கக்கூடிய ஒரு விடயமாக கருதவேண்டும். இப்பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர அவர்களின் மனம் சோர்வடையும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத பல மாணவர்கள் இன்று கல்வியில் உச்ச நிலைக்கு சென்றிருப்பதை நாம் காண்கின்றோம். எனவே இது ஒரு பரீட்சை மாத்திரமே தவிர மாணவர்களின் வாழ்க்;கை அல்ல. என்பதை எல்லோரும் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். இப்பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்கின்றபொழுது பரீட்iசியில் தோற்றிய அனைத்து மாணவர்களையும் இணைத்துக் கொண்டு பாராட்டவேண்டும்.

விசேடமாக பாடசாலை நிர்வாகம் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்படுத்துகின்ற பொழுது சித்திடையந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவத்தை அங்கு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். ஏனெனில் அநேகமான பாடசாலைகளில் சித்தியடைந்தவர்களைவிட சித்தியடையாத மாணவர்கள் அதிகமானவர்களாக இருப்பார்கள். என்பதை கருத்திற்கொண்டு செயல்படுமாறும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments