சீனாவில் அமைக்கப்பட்ட கண்ணாடிப் பாலமொன்று, உல்லாசப் பயணிகள் இருக்கும்போது வெடித்துள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் குறிப்பிடுகின்றன.
எனினும், உல்லாசப் பயணி ஒருவரின் துருபிடிக்காத உருக்கினால் செய்யப்பட்ட தண்ணீர் போத்தல் விழுந்ததினால் கீறல் மட்டும் விழுந்ததாகவும், வெடிப்பு அல்ல என்றும் டேலிமெயில் செய்தி சேவைக்கு உல்லாசப் பயணி ஒருவர் தகவல் தெரிவித்திருந்தார். இதனால் பயணிகளுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என்றும் அத் தகவல் கூறுகின்றது.
தரையில் இருந்து 3540 அடி உயரத்தில், ஆங்கில 'U' எழுத்து வடிவிலான வளைவுப் பகுதி கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது. இப் பாலம் செப்டெம்பர் 20 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
சீன உற்பத்திகளின் தரத்தை கிண்டலாகப் பேசுவோரின் வாய்க்கு கண்ணாடி அவல் கிடைத்துள்ளது.
Tamil : Hisham Hussain
0 Comments