Subscribe Us

header ads

அப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் சம்சுங்

ஏட்டிக்கு போட்டியாக மொபைல் சாதன உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் என்பன ஒரு நிறுவனத்தின் உற்பத்தியை நகல் செய்தமை காரணமாக நீதிமன்றம் வரை சென்று வந்தமை தெரிந்ததே.

இவ்வாறான நிலையில் அப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் ஸ்மார்ட் கடிகாரத்திற்கான தொடுதிரையினை வடிவமைத்துக் கொடுக்க சம்சுங் நிறுவனம் சம்மதித்துள்ளது.

இதன்படி தற்போதைய மொபைல் சாதனங்களில் IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைப் பயன்படுத்தும் அப்பிள் நிறுவனம் எதிர்வரும் காலங்களில் AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரைகளைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments