ஐக்கிய அரபு ராஜ்யத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீட்டுக்கடன் வசதியினை பெற்றுக்கொடுக்க அந்நாட்டு பிரபல வங்கியான மஷ்ரிக் வங்கி விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஐக்கிய அரபு ராஜ்யத்திற்கு விஜயம் செய்தபோது மஷ்ரிக் வங்கியுடனான கலந்துரையாடலில் வங்கி நிருவாகம் இதற்க்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய ஐக்கிய அரபு ராஜ்யத்தில் பணிபுரியும் மூன்று லட்சம் இலங்கையர்களுக்கு வீட்டுக்கடன் வசதியினை பெற்றுக்கொடுக்க இலங்கை மத்திய வங்கி மற்றும் மஷ்ரிக் வங்கி ஆகியன தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
0 Comments