Subscribe Us

header ads

நாட்டின் தேசிய அபி­மா­னத்தை அமெ­ரிக்க டொல­ருக்கு விற்­பனை செய்­து­விட வேண்டாம்

எமது நாட்டின் தலைமை பொறுப்­புக்­களை அமெ­ரிக்­கா­விடம் கைய­ளித்­துள்ள தற்­போ­தைய அர­சாங்கம் எமது நாட்டின் தேசிய அபி­மா­னத்தை அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்­து­விட வேண்டாம் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.
ஐ.நா.மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட யுத்­தக்­குற்ற அறிக்­கையை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்து மஹிந்த ஆத­ரவு அணி­யினர் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­க­ளாக தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்டம் நேற்று விஹார மாதேவி பூங்­காவில் இடம் பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் நாட்டில் உரு­வாகும் பட்­சத்தில் நாடு சர்­வ­தேச சக்­தி­க­ளி­டத்தில் மண்­டி­யிட வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­படும் என நாம் கடந்த தேர்தல் காலத்­தி­லி­ருந்து சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம். இது ஐக்­கிய தேசிய கட்சி பரம்­ப­ரை­யாக முன்­னெ­டுத்து வந்த செயற்­பாடு என்­பதை நாம் அறிந்­தி­ருந்த கார­ணத்­தி­னா­லேயே நாம் அது தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தோம்.
1977 ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்­கிய தேசிய கட்சி இவ்­வாறு தான் செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. நாம் இது தொடர்பில் மக்­க­ளுக்கு பல­முறை அறி­வு­றுத்தல் விடுத்­தி­ருந்­த­போ­திலும் சர்­வ­தேச சக்­திகள் தமது இலக்கை அடை­வதை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது போய்­விட்­ட­தென்­பது வருத்­த­ம­ளிக்கும் கார­ணி­யா­கவே உள்­ளது.
நான் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பாடு தொடர்பில் அர­சாங்க தரப்பில் ஒரு­வ­ரிடம் வின­வி­ய­போது அவர் சர்­வ­தே­சத்தின் நட்பு நாட்­டுக்கு தேவைப்­ப­டு­கின்­ற­மை­யினால் சர்­வ­தே­சத்­திற்கு கீழ்ப்­ப­டிந்து செயற்­ப­டு­வ­தாக குறிப்­பிட்டார். வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. சர்­வ­தேச சக்­தி­க­ளி­டத்தில் எம்மை காட்­டிக்­கொ­டுத்­து­விட்ட பின்னர் அதனை எவ்­வாறு நட்பு தேவை நிமித்தம் செய்­கின்றோம் என குறிப்­பிட முடியும்.
இதனால் ஐ.நா.எமது நாட்டின் உள்­ளக விட­யங்­களில் தலை­யிட வழி­ச­மைத்­துக்­கொ­டுத்­துள்­ளது தற்­போ­தைய அர­சாங்கம்.இந்த நாட்டின் தலை­மைப்­பொ­றுப்­புக்கள் அனைத்தும் தற்­போது அமெ­ரிக்­கா­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. மறு­புறம் ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லுகை கிடை­க்கப்­போ­வ தாக அர­சாங்கம் தம்­பட்டம் அடித்துக் கொள்­கின்­றது. ஆனால் குறித்த வரிச்­ச­லுகை இல்­லாத கட்­டத்­திலும் எமது நாடு உலக பொரு­ளா­தார சந்­தையில் உன்­ன­த­மான நிலையில் இருந்­ததை மறுக்க எவ­ராலும் முடி­யாது.
எவ்­வா­றா­யினும் தற்­போ­தைய அர­சாங்­கத்­திடம் நாம் கேட்­பது ஒரு விடயம் தான். எமது நாட்டின் தேசிய அபி­மா­னத்தை அமெ­ரிக்க டொல­ருக்கு விலை­பே­சு­வதை நிறுத்­துங்கள்.எமது நாட்டின் தலை­யெ­ழுத்தை டொலர்கள் தீர்­மா­னிக்­க­வேண்­டிய நிலையை தோற்­று­விக்க வேண்டாம் என்­ப­துதான் என்றார்.

Post a Comment

0 Comments