Subscribe Us

header ads

வீதி விபத்­துக்­களை குறைப்­ப­தற்கு தேசிய மட்­டத்­திலான அவ­சர முன்­னெ­டுப்­புக்கள் மேற்­கொள்ளப்பட வேண்டும்

அதி­க­ரிக்கும் வீதி விபத்­துக்­களைக் குறைப்­ப­தற்கு தேசிய மட்­டத்­தி­லான அவ­சர முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வீதி விபத்­துக்­களின் அதி­க­ரிப்பை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து தேசிய வீதிப் பாது­காப்புச் சபையில் நடை­பெற்ற கூட்­ட­ மொன்றில் அவர் இவ்­வாறு தெரிவித்தார்.அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவ்­வ­ரு­டத்தின் முதல் ஒன்­பது மாதங்­களில் வீதி விபத்­துக்­க­ளினால் 2,200 பேர் உயிர் இழந்­துள்­ளனர். கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் 349 பேரே உயிர் இழந்­துள்­ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு 36,050 வீதி விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ள­துடன் அவ ற்றில் 2,440 பேர் மர­ணித்­துள்­ளனர். 6,847 பேர் கடு­மை­யான காயத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.
இப்­ப­தி­வு­களை ஒப்­பிட்­டுப்­பார்க்­கையில் வீதி விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான தேசிய மட்­டத்­தி­லான அவ­சர நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­க­பட வேண்­டி­யுள்­ள­து.இதன் நிமித்தம், புதிய சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், வீதி விபத்­துக்கள் குறி த்து மக்­களை விழிப்­பு­ணர்­வூட்டும் நட­வ­டிக்­கை­களும் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். அத்­துடன் வீதிப்­பா­து­காப்­புக்­கான தேசிய கொள்­கை­யொன்றும் உரு­வாக்­கப்­ப­டு­வதும் நீண்­ட­கா­லத் திட்­டத்தின் பிர­காரம் இக்­கொள்கைத் திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மென அ­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள் ளார்.
எண்ணெய் கொள்களன் வாகனம் (பௌஸர்) உட்­பட கன­ரக வாக­னங்­களால் ஏற்­ப டும் வீதிப் போக்­கு­வ­ரத்து நெருசல் மற் றும் பாடசாலை போக்குவத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து, வான் முச் சக்கரவண்டி தொடர்பில் விசேட சட்டங்க ளும் அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments