வீதியில் செவிப்புலன் ஆற்றலற்ற தனது தந்தையுடன் மிகவும் உரத்த குரலில் உரையாடிய நபரொருவரால் சினமடைந்த அவரது அயல் வீட்டில் வசிக்கும் இளைஞன், அவரது குரல்வளையை உடைந்த போத்தலால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிட்னி நகரின் தென்மேற்கே ரகெம்பா எனும் இடத்தைச் சேர்ந்த கெல்லி வென்ரிகடூ (45 வயது) என்ற மேற்படி நபர், சம்பவ தினம் அதிகாலை வேளையில் தனது பெற்றோருடன் வெளியில் சென்று விட்டு திரும்பிய வேளையிலேயே இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.
தாய் வீட்டினுள் சென்றுவிட கெல்லி வீதியில் நின்றவாறு தனது செவிப்புலன் ஆற்றல் குறைந்த தந்தையுடன் உரத்த குரலில் உரையாடியுள்ளார்.
இதன்போது அங்கு வந்த அயல் வீட்டில் வசிக்கும் 24 வயது இளைஞன் சினத்துடன் கெல்லியை நெருங்கியுள்ளான்.
இதன்போது அங்கு வந்த அயல் வீட்டில் வசிக்கும் 24 வயது இளைஞன் சினத்துடன் கெல்லியை நெருங்கியுள்ளான்.
கெல்லி சத்தமாக உரையாடியது தனது தவறென ஒப்புக்கொண்டு அமைதியாக வீட்டுக்குள் செல்ல இணங்கிய போதும், அந்த இளைஞன் சினம் தணியாமல் கெல்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது குரல்வளையை உடைந்த போத்தலால் குத்தி அவரைப் படுகொலை செய்ததாக கெல்லியின் மகனான கிம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி படுகொலையை மேற்கொண்ட குறிப்பிட்ட இளைஞன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தானாக முன்வந்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளான்.
அந்த இளைஞன் மதுபோதை காரணமாகவா அல்லது இனவாத குரோதம் காரணமாகவா மேற்படி படுகொலையை மேற்கொண்டான் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த இளைஞன் மதுபோதை காரணமாகவா அல்லது இனவாத குரோதம் காரணமாகவா மேற்படி படுகொலையை மேற்கொண்டான் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments