Subscribe Us

header ads

தனி­யார்­துறை ஊழி­யர்­களின் சம்­பளம் ரூபா 2500 வினால் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்

தனி­யார்­துறை ஊழி­யர்­களின் சம்­பளம் ரூபா 2500 வினால் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ள சமூக நீதிக்­கான தொழிற்­சங்க ஒன்­றியம் சம்­பள நிர்­ணய ஆணைக்­குழு மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட வேண்­டு­மென்றும் அத­னோடு வேறு பல கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­துள்­ளது.
சமூக நீதிக்­கான தொழிற்­சங்க ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­திகள் திங்­கட்­கி­ழமை ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்ற பேச்சு வார்த்­தை­களின் போதே இக் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
ஜனா­தி­ப­தி­யு­ட­னான தொழிற்­சங்க பிர­தி­நி­தி­களின் பேச்­சு­வார்த்­தை­களின் போது, ஜனா­தி­ப­தியின் தலை­மையில் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் மற்றும் விட­யத்­திற்கு பொறுப்­பான சில அமைச்­சர்­களின் பங்­க­ளிப்­புடன் தேசிய மட்­டத்தில் தொழிற்­சங்க ஆலே­சனைச் சபை­யொன்றை நிய­மிப்­ப­தற்­கான அனு­ம­தியை இதன்­போது ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ளார்.

இதன்­போது தொழிற்­சங்க பிர­தி­நி­தி­களால் கீழ் கண்ட கோரிக்­கைகள் ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
அதா­வது ரூபா 10000 கொடுப்­ப­னவை அரச ஊழி­யர்­களின் அடிப்­படைச் சம்­ப­ளத்­தோடு இணைத்தல். தேசிய தொழி­லாளர் ஆலோ­சனை சபைக்குள் அரசு மற்றும் தனியார் துறை­யி­னரின் சம அள­வி­லான பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்தல்.
டெலிகொம் மற்றும் ஏனைய அலை அரச நிறு­வ­னங்­களின் (மேன்­பவர்) மனி­த­வள ஊழி­யர்­களை நிரந்­த­ர­மாக்­குதல்.தனியார் துறை ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை ரூபா 2500 ஆக உயர்த்­துதல். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­கா­ரத்தை பெற்றுக் கொள்­வது தொடர்­பிலும் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுள்­ளன.
அரசு சேவைகள் ஆணைக்­கு­ழுவை தொடர்ந்தும் சுயா­தீன ஆணைக்­கு­ழு­வாக ஸ்தாபித்தல். சம்­பள நிர்­ணய சபையை மறு­சீ­ர­மைத்தல். "அக்­ர­ஹாரா" காப்­பு­று­தி­யி­லுள்ள குறை­பா­டு­களை நீக்கல், சம்­பள உயர்வு வீதத்தை அதி­க­ரித்தல். போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி­க­ளுக்கு தீர்­வினை பெற்றுக் கொடுத்தல்.அனைத்து அரச ஊழி­யர்­க­ளுக்கும் மோட்டார் சைக்­கிள்­களை பெற்றுக் கொடுத்தல். உட்­பட தொழிற்­சங்­கங்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரும் இதன்­போது ஜனா­தி­பதியிடம் கைய­ளிக்­கப்­ப­ட்டுள்­ளது.
இப் பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்கள் சமன் ரத்னப்பிரிய, இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உட்பட சங்கப் பிரதிநிதிகள் பலர் இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments