Subscribe Us

header ads

மக்கா கிரேன் விபத்தில் ஷஹீதான மற்றும் காயமடைந்தவர்களுக்கு சுமார் மூன்று லட்சம் சவுதி ரியால்கள் வரை குருதிப்பணம் வழங்கப்படும்.



கடந்த வாரம் மக்காவில் இடம்பெற்ற கிரேன் விபத்தில் ஷஹீதான ஒவ்வொரு நபருக்கும் (அவர்களின் குடும்பத்தினருக்கும்) காயமடைந்தவர்களுக்கும் சுமாராக தலா மூன்று லட்சம் ரியால்கள் (KSR 300,000) குருதிப்பணம் (ப்ளட் மணியாக) வழங்க குறிப்பிட்ட நிர்மான பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தின் காப்புறுதி அமைப்பு முன் வந்துள்ளதாக சவுதி கேசட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

(காயமடைந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையில் இழப்பை பொறுத்து சில மாற்றங்கள் காணப்படும்)

மொத்தமாக  SR32 மில்லியன் வழங்கவும் அதன்படி ஒருவருக்கு 300,000 சவுதி ரியால் வீதம் கொடுக்கப்படவுள்ளது.

குறிப்பிட்ட விபத்தில் சுமார் 107 பேர் மரணித்து 230 பேர்வரை காயங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


தமிழாக்கம்;
-Razana Manaf-

Post a Comment

0 Comments