Subscribe Us

header ads

யுத்­தக்­குற்ற விசா­ர­ணையின் போது ­முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது சகாக்­களும் சாட்­சியம் அளிக்க வேண்டும்


யுத்தக்குற்றம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் இடம் பெறும் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அவ­ரது அனு­ச­ரணை­யா­ளர்­களும் சாட்­சியம் அளிக்க வேண்­டிய தேவை ஏற்­ப­டு­மென சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன வெளிநாட்டுச் செய்தி சேவைக்கு தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அவ­ரது சகாக்கள், முன்னாள் பாது­காப்பு செய­லாளர் மற்றும் கட்­டளை தள­ப­தி­கள்­ ஆ­கி­யோரில் எவ­ரேனும் குற்றம் செய்­துள்­ளமை நிருப­ன­மாகும் பட்­சத்தில் அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
எனது தெரி­வுக்கு அமைய யுத்தம் என்­பது தவ­றா­னது. அதன் பிர­காரம் யுத்தக் குற்­றங்­களில் ஈடு­படும் படி எவ­ரா­வது கட்­டளை பிறப்பித்­தி­ருந்தால் அவ­ரிடம் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். எமது அர­சாங்கம் அதற்கு உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும்.
மனித உரி­மைகள் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் வெளியி­டப்­பட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அர­சாங்க தரப்­பி­லி­ருந்து தற்­போது கருத்து முரண்­பா­டுகள் எழுந்­துள்­ளன.
இந்­நி­லையில் மாநாட்டில் பங்­கேற்ற வெளிவி­வ­கார அமைச்சர் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பணிப்­பு­ரைக்கு அமைய விசா­ர­ணை­களை நடத்­து­வ­தாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.
ஆனால் விசேட நீதி­மன்­றத்தின் கீழ் விசா­ரணை இடம் பெற வேண்டும் என்று மனித உரிமை ஆணைக்­குழு அறி­வித்த போது அதற்கு இலங்கை வெளிவி­வ­கார அமைச்சர் இணக்­கப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும் சர்­வ­தேச தரத்திற்கு அமை­வான விதத்­தி­லேயே உள்­நாட்டு பொறி­முறை அமைத்து விசாரணை முன்னெடுக்கப்படும்.ஆனால் ஒரு தனி நாடாக சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்துவது தொடர்பில் எமக்கும் உடன்பாடு இல்லை என்றார்.

Post a Comment

0 Comments