Subscribe Us

header ads

காலை பத்து மணிக்கு பணியை தொடங்கினால் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யலாம்!...


பன்னிரண்டு மணிநேரத்துக்கும் மேல் தொழிலாளிகளை, தொழிற்சாலைகள் பிழிந்தெடுத்து கொண்டிருந்ததிலிருந்து, எவ்வளவோ கால போராட்டத்தால் கிடைத்த வேலைநேரக் குறைப்பு அதாவது 8 மணி நேர வேலை என ஆகிவிட்ட 9-5 வேலையும் நம் உடலுக்கு உபாதைகளை விளைவிக்கின்றது என இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது.


ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் ஒரேநாள் கிடைக்கும் விடுமுறையிலும் நாம் வாரம் முழுவதும் தேக்கி வைத்திருந்த தனிப்பட்ட வேலைகளை செய்வதால், திங்கள்கிழமை காலை படுக்கையை விட்டு எழுவதுற்குள் நம் உடல் தொய்வடைகிறது. நமது வேலை நேரம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நமது உடலுக்குள் இருக்கும் கடிகாரம் சாதாரண கடிகாரம் போல செயல்படுவதில்லை.

நமது உடல் இயக்கத்துக்கு முக்கிய ஆதாரமான இதயமும், கல்லீரலும் செயல்படும் விதம் ஒன்றுக்கொன்று மாறுபடும். நமது வேலைக்காக அதை நேரம் மாற்றி வேலை செய்யச் சொல்கின்றோமாம். இந்த உலகளாவிய பிரச்சனை, வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்த முடியாமல் நம்மை தடுக்கிறது. இதனால், உடலின் அன்றாடச் செயல்பாடுகளில் மட்டுமின்றி, நமது உணர்வுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. 

நமது உடல் தொந்தரவுகளின்றி அனிச்சையாக எழ வேண்டும், முந்தைய நாளின் உடல்அசதி, மனச்சோர்வு மட்டுமல்லாது, நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் தூக்கம் அதிகரிக்கும் என்பதால் நமது பொருளியல் சார்ந்த பணிகளை குறைந்தபட்சம் காலை 10 மணிக்கு பின்னரே தொடங்க வேண்டும் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட பால் கெல்லி.

சிலர் அடிக்கும் வெயிலிலும் இழுத்து போர்த்தி தூங்குவதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் நம் கண் நம்முடைய தூங்கும் நேரத்தை கண்காணிப்பதில்லை, நம்முடைய மூளையின் அடிப்பகுதியிலுள்ள ‘ஹைப்போதலாமஸ்’தான் இதனை கண்காணித்து நம்மை முழுமையாக தூங்க வைக்க முயல்கிறது. 

நம்மால் சுமார் 55 வயது வரை காலை 10 மணிக்கு முன்பு செய்யும் வேலைகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. அதன்பின்னர் தான் தூக்கமே போய் விடுமே!

Post a Comment

0 Comments