ஐரோப்பா சென்று தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளில் ஏராளமானோர் ஹங்கேரி நாட்டு கிராமம் ஒன்றில் தங்கியுள்ளனர். அகதிகள் குறித்து செய்தி சேகரிக்க அங்கு ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் குவிந்துள்ளனர். கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அகதி தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது உள்ளூர் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் வீடியோகிராபர் ஒருவர், அந்த அகதியை காலை இடறி கீழே விழ வைத்தார். இதில் அந்த அகதி குழந்தையுடன் கீழே விழுந்து காயம் அடைந்தார். மேலும் ஒரு அகதி சிறுமியையும் இதே போல் காலை இடறி கீழே விழ வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை படம் பிடித்த மற்றொரு வீடியோகிராபர், இதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். இதையடுத்து அகதியை தடுத்து விழவைத்த பெண் வீடியோகிராபரை பணிநீக்கம் செய்துள்ளதாக அவர் வேலை பார்த்து வந்த தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹங்கேரியின் என் 1 டி.வி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அந்த வீடியோகிராபரின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் என் 1 டிவி நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர், பெண் வீடியோகிராபரின் பதவிநீக்கத்தை உறுதி செய்துள்ளார். அந்த பெண் வீடியோ கிராபரின் செயல் எந்தவிதத்திலும் ஏற்கதக்கதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
0 Comments