Subscribe Us

header ads

விமானத்தில் பயணிகள் மீது சிறுநீர் கழித்த வாலிபருக்கு 5 மணி நேர சிறை!



விமானத்தில் சகப்பயணிகள் மீது சிறுநீர் கழித்த வாலிபர் 5 மணிநேரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்.

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் உள்ள ஆன்கரேஜ் நகரில் இருந்து ஆரெகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு ஜெட்புளூ விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 27 வயதுடைய ஜெப் ரூபின் என்ற வாலிபரும் பயணம் செய்துள்ளார்.

ஆன்கரேக் நகரில் இருந்து ஜெட்புளூ விமானம் புறப்பட்டது முதல் தனது இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டே வந்துள்ளார் ஜெப் ரூபின். அந்த விமானம் தரையிறங்குவதற்கு சுமார் 30 நிமிடத்துக்கு முன் ஜெப் ரூபினுக்கு திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்துள்ளது. அப்போது, சற்றே தூக்கம் கலைந்த ஜெப்ரூபன் தனது இருக்கையில் இருந்து எழுந்து முன் இருக்கைகளுக்கு நடுவே உள்ள இடைவெளி வழியாக சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால், முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளின் மீதும் அவர்களின் உடைகள், கைப்பைகளும் ஈரமாகி உள்ளது. ஆனால் ஜெப்ரூபன் எதுவும் நடக்காததுபோல் தனது இருக்கையில் மீண்டும் படுத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்துள்ளார். தங்கள் மீதும் தங்கள் உடமைகள் மீதும் சிறுநீர் பட்ட பயணிகள் இந்த சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளனர்.  இதை தொடர்ந்து, விரைந்து வந்த விமானப் பணியாளர்கள், போர்ட்லேண்ட்டில் விமானம் தரையிறங்கியவுடன் ஜெப்ரூபனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஜெப்ரூபன் மீது வழக்கு பதிவு செய்து சுமார் 5 மணிநேரம் அவரை போலீஸ் லாக்அப்பில் அடைத்து வைத்திருக்கின்றனர். அதன்பின் சொந்த ஜாமீனில் ஜெப்ரூபனை போலீசார் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments