Subscribe Us

header ads

ரூ. 35 லட்சம் வழங்க இங்கிலாந்து நிறுவனம் தயார் - சுவை குறைவான, திரவ உணவு உட்கொள்ள நீங்கள் தயாரா?



விலங்குகளை வேட்டையாடி பச்சை இறைச்சி உண்பதிலிருந்து விலகி, தற்போது வேக வைத்து, மசித்து, சாறுகள் குடிப்பது வரை மனித உணவுப் பழக்கம் வந்து நிற்கிறது. நம் இனத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக மனிதனுக்கு பற்களும், முடியும் இல்லாது போகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு இப்போதே தயாராகும் விதமாக நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளை பொடித்து, அதன் சுவையை குறைத்து சாறாக வழங்க தொடங்கியுள்ளது ‘ஹியூல்’ என்கிற நிறுவனம். இந்த புதியவகை பானம் இங்கிலாந்தில் மூன்று முறை விற்பனைக்கு வைக்கப்பட்டு முழுவதும் விற்றுத்தீர்த்தது. ஆனால், இதன் உபாதையாக ஆசனவாய் வழியே அதீத வாயு நீக்கம் ஏற்படுவதாக மக்கள் குறை கூறுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, எல்லா முறையும் இந்த பானம் விற்றுத்தீர்த்திருந்தாலும், மக்களுக்கு அன்றாட தேவையை நிறைவு செய்யும் விதமாக எல்லா புரதமும் இருக்கும் இதனை தொடர்ச்சியாக பயன்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை. 

இதனை அளவுக்கு மீறி உட்கொள்ளும் எண்ணமே வரக்கூடாது என்பதற்காக, சுவை குறைவாகவே இந்த பானத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் 35 ஆயிரம் பவுண்டுகள் சம்பளத்துடன் (இந்திய மதிப்புக்கு சுமார் 35 லட்சம் ரூபாய்) ஓராண்டு முழுக்க இதனை உபயோகிக்க இந்நிறுவனம் இங்கிலாந்தில் ஆள்தேட தொடங்கியுள்ளது.

மனிதனின் உடலுக்கு தேவையான தெம்பு கிடைத்த பின்னும் வேறு சுவைகளை தேடுவது தொடர்பாக ஆய்வு நடத்த தீர்மானித்துள்ள இந்நிறுவனம், இந்த ஆராய்ச்சி தொடர்பான பரிசோதனைக்கு உட்படும் நபர் தொடர்ந்து ஓராண்டு காலத்துக்கு இந்த பானத்தை தவிர வேறு எவ்வகை உணவையும் சாப்பிட கூடாது என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

Post a Comment

0 Comments