முதலை வேட்டை என்றதுமே நினைவுக்கு வருவது, எப்போதும் தொலைக்காட்சியில் முதலைகளுடன் வலம் வரும் ஸ்டீவ் இர்வின்தான். முதலைகளின் காதலனாக திகழ்ந்த இவர், சில வருடங்களுக்கு முன் விஷமீன் கடித்து இறந்தது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அந்த சோகத்தைப் போக்கும் வகையில் தற்போது உதயமாகியிருக்கிறான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குட்டி ஸ்டீவ் இர்வின். இவனது பெற்றோர்களான க்ரெக், ஜூலியா இருவருமே வனவிலங்கு ஆர்வலர்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 3 வயதிலேயே தனியாக முதலைகளைப் பிடிக்க தொடங்கிய ‘குட்டி ஸ்டீவ் இர்வின்’ சார்லி பார்கருக்கு தற்போது 5 வயது.
இவனது பெற்றோர் விக்டோரியா நகரில் பலாரட் என்ற வனவிலங்கு பூங்காவை நிர்வகித்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் சார்லி, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் விலங்குகளுக்கு உணவிடுவது, சுற்றுலாப் பயணிகளை காட்டிற்கு அழைத்துச் செல்வது, உப்பு நீர் முதலையை பின் பக்கத்திலிருந்து வளைத்துப்பிடிப்பது என்ற ஒரு முழுமையான காட்டு ரேஞ்சராகவே மாறியுள்ளான்.
இதனால், அந்த பூங்காவிற்கு வரும் அனைவரும் சார்லியை ஜூனியர் ஸ்டீவ் இர்வின் என்றே அழைக்கின்றனர்.






0 Comments