Subscribe Us

header ads

வேட்பாளர்கள் செய்த செலவுகள் குறித்து அறிக்கையை வெளியிட நடவடிக்கை


நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செய்த செலவுகள் குறித்த தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட உளள்தாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சில வேட்பாளர்கள் எவ்வளவு பணத்தை செலவிட்டுள்ளார்கள் என்பது குறித்து தேர்தலின் பின்னர் வெளியிடப்பட உள்ளது.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவொன்று இவ்வாறு அறிக்கை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் தற்போது செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரச்சாரத்திற்கு செலவாகும் தொகை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகம் என கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.

சில வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக 200 முதல் 400க்கும் மேற்பட்ட லட்ச ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

Post a Comment

0 Comments