Subscribe Us

header ads

தேர்தல் முடியும்வரை சுசிலின் கையொப்பங்கள் ஏற்கப்படும்



எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்­கான தேர்தல் முடி­வ­டையும் வரை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முன்னாள் செய­லாளர் சுசில் பிரேம்­ஜ­யந்­தவின் கையொப்­பங்­க­ளுடன் கூடிய அறி­வித்­தல்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய ஐ.ம.சு.மு.வின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.
வாக்கு எண்ணும் நிலை­யங்­க­ளுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி யின் சார்பில் சுசில் பிரேம்­ஜ­யந்­தவின் கையொப்­பத்­துடன் நிய­மிக்­கப்­பட்­டுள்ள முக­வர்­களை அனு­ம­திக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தேர்தல் ஆணை­யாளர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செயலர் பத­வி­யி­லி­ருந்து சுசில் பிரேம்­ஜ­யந்த நீக்­கப்­பட்­ட­தாக கடந்த வௌ்ளிக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உதவி தலைவர் தினேஷ் குண­வர்த்­தன மற்றும் முன்­ன­ணியின் பொரு­ளாளர் டலஸ் அழ­கப்­பெ­ரும ஆகியோர் நேற்று முன்­தினம் தேர்தல் ஆணை­யா­ளரை சந்­தித்து பேச்சு நடத்­தி­ய­போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
முன்­ன­தாக வௌ்ளிக்­கி­ழமை மாலை சுசில் பிரேம்­ஜ­யந்த செயலர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உதவி தலைவர் தினேஷ் குண­வர்த்­தன தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தார்.
அந்தக் கடி­தத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் பத­வி­யி­ருந்து சுசில் பிரேம்­ஜ­யந்த நீக்­கப்­பட்­டமை சட்­ட­வி­ரோ­த­மா­னது என்றும் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டாம் எனவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத­னை­ய­டுத்தே நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தேர்தல் ஆணை­யா­ள­ருக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது.
இந்த சந்­திப்பில் தினேஷ் குண­வர்த்­தன மற்றும் டலஸ் அழ­கப்­பெ­ரும உள்­ளிட்ட ஆறு பேரும் தேர்தல் ஆணை­யா­ளரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் பத­வி­யி­ருந்து சுசில் பிரேம்­ஜ­யந்த நீக்­கப்­பட்­டமை சட்­ட­வி­ரோ­த­மா­னது என்றும் அவ­ரையே தேர்­தலில் செய­ல­ராக தேர்தல் ஆணை­யாளர் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்றும் ஐ.ம. சு. மு. வின் பிர­தி­நி­திகள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
இந்­நி­லையில் இந்த சந்­திப்பு தொடர்பில் ஐ.ம.சு. மு. வின் உதவி செய­லரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தகவல் தரு­கையில்
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் பத­வி­யி­ருந்து சுசில் பிரேம்­ஜ­யந்த நீக்­கப்­பட்­டமை சட்­ட­வி­ரோ­த­மா­னது. இது தொடர்பில் நான் வௌ்ளிக்­கி­ழ­மையே மாலையே தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யி­ருந்தேன். அது மட்­டு­மன்றி சனிக்­கி­ழமை நாங்கள் தேர்தல் ஆணை­யா­ளரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம்.

எமது கோரிக்­கைக்கு பதி­ல­ளித்த தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வ­டையும் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவின் கையொப்பங்களுடன் கூடிய அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே ஏதாவது சிக்கல்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் எம்மிடம் குறிப்பிட்டார் என்றார்.

Post a Comment

0 Comments