Subscribe Us

header ads

"பாதாள உலகக்கோஷ்டிக்கும் ஐ.தே.க.வுக்கும் தொடர்பில்லை''


பாதாள உலக கோஷ்­டி­க­ளுக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது. நல்­லாட்­சியின் மீது விருப்பம் கொள்­ளா­த­வர்­களின் சதித் திட்­டமே புளு­மெண்டல் சம்­ப­வ­மாகும். இது தொடர்பில் பொலிஸார் விரைவில் இர­க­சி­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வார்கள் என ஊட­கத்­துறை அமைச்­சரும் காலி மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.
எமது கொள்கை என்­றைக்கும் மாற்றம் அடை­யாது. நல்­லாட்­சியை பலப்­ப­டுத்தும் வகையில் தேர்­தலை நீதி­யான முறை­யில நடத்தி காண்­பிப்போம். சுமார் பத்து வரு­டங்­க­ளாக ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்து செய்ய முடி­யாத காரி­யாங்­களை எவ்­வாறு குரு­நாகல் மாவட்­டத்தின் சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மஹிந்த செய்யப்போகின்றார் என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,
பத்து வரு­டங்­களாக நாட்டை ஆட்சி செய்து மக்­க­ளுக்கு எந்­த­வொரு நிவா­ர­ணத்­தையும் வழங்­க­வில்லை. நாட்டின் அனைத்து அபி­வி­ருத்தி திட்­ட­ங்க­ளி­னூ­டா­கவும் மோச­டிகள் செய்­யப்­பட்­டன. மக்கள் உணரும் படி­யான எந்­த­வொரு பணி­களும் செய்­யப்­ப­ட­வில்லை.
எனவே பத்து வரு­டங்­களாக தன்­னு­டைய குடும்­பத்தின் வளர்ச்­சியை மாத்­திரம் கருத்திற் கொண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ செயற்­பட்டார். எனினும் சாதா­ரண மக்கள் தொடர்பில் நிவா­ரண திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. நிவா­ரண திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் அத­னூ­டா­கவும் மோச­டிகள் செய்­யப்­பட்­டன.
எனவே முன்னாள் ஜனா­தி­பதி தன்­னு­டைய ஆட்­சியின் போதே போற்றும் படி­யான எந்­த­வொரு நிவா­ரண திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

ஆகவே சுமார் பத்து வரு­டங்­க­ளாக நாட்டு மக்­க­ளுக்கு ஜனா­தி­ப­தி­யாக இருந்து கொண்டு செய்­யாத சேவை­களை குரு­நாகல் மாவட்­டத்தின் சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வந்து எவ்வாறு செய்யப்போகிறது. நகைச்­சு­வை பாங்­கான முறையில் கொள்கை பிர­க­ட­ணங்­களை தயார் செய்­துள்­ளனர்.
ஆகவே இவ்­வா­றான கொள்கை பிர­க­ட­ணங்­களால் கொண்டு மக்­களை ஏமாற்ற முடி­யாது. தற்­போது நாட்டு மக்கள் அனை­வரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பக்கம் அணித்­தி­ரண்­டுள்­ளனர்.
இதே­வேளை நல்­லாட்­சிக்கு பலம் சேர்க்கும் வகையில் நீதி­யா­ன­தா­கவும் அமை­தி­யா­கவும் தேர்தல் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்தலை நல்­லாட்­சியை பலப்­ப­டுத்தும் செயற்­திட்­டத்தின் முன்­மா­தி­ரி­யான தேர்­த­லாக மாற்­றி­யுள்ளோம்.
மேலும் கொழும்பு புளு­மென்டல் சம்­பவம் பாதாள கோஷ்­டி­க­ளுக்­கி­டை­யி­லான மோத­லாக கரு­தப்­ப­டு­கின்­றது. எனினும் பாதாள கோஷ்­டி­க­ளுக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது. எமது தேர்தல் பிர­சா­ரங்கள் அனைத்தும் கோஷ்டிகளுடன் தொடர்புப்பட்டதல்ல எமக்கென்று ஒரு கொள்கை உள்ளது. அதனை மீறி எம்மால் ஒன்றும் செய்யமுடியாது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் திவீரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்தாக இரகசியங்களை விரைவில் பொலிஸார் வெ ளிப்படுத்துவார்கள் என்றார்.

Post a Comment

0 Comments