Subscribe Us

header ads

க.பொ.த.(உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்


கல்வி பொது தரா­தர உயர்­த­ரப்­ ப­ரீட்சைகள் இன்று நாட­ளா­விய ரீதியில் ஆரம்பமா கின்றன. இம்­முறை நாட­ளா­விய ரீதியில் பரீட்­சையில் 3,09,069 பரீட்­சார்த்­திகள் தோற்­ற­வுள்­ளனர்.
பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்­பா­டு­களும் தயார் என பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ள­து. இத­னி­டையே உயர்­தர பரீட்சை நிலை­யங்­க­ளாக செயற்­ப­ட­வுள்ள அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் 24 மணி­நேர பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் திணைக்­களம் தெரிவித்­துள்­ளது.
இது தொடர்பில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மார கருத்து தெரிவிக்­கையில்.
இவ்­வாண்­டுக்­கான கல்வி பொது­த­ரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்சை இன்று செவ்­வாய்­கி­ழமை ஆரம்­ப­மா­கின்­றது. இம்­முறை நாட­ளா­விய ரீதியில் பரீட்­சையில் 3,09,069 பரீட்­சாத்­திகள் தோற்­ற­வுள்­ளனர்.2,36,072 பாட­சாலை பரீட்­சாத்­தி­களும், 72,997 தனிப்­பட்ட பரீட்­சாத்­தி­களும் தோற்­ற­வுள்­ளனர்.
இவ்­வா­றான நிலையில் பரீட்சை திக­தி­யா­னது ஏற்­க­னவே பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­தற்­கி­ணங்க இம்­மாதம் 17 ஆம் திகதி பொது தேர்தல் ஒன்ற நடை­பெ­ற­வுள்­ளது.
பரீட்­சைகள் திணைக்­களம் பரீட்­சை­க­ளுக்­காக திட்­ட­மிட்­டி­ருந்த காலங்­களில் மாற்­றங்­களை கொண்­டு­வந்­தது.அதன் அடி­ப­டையில் இன்று 04 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­படவுள்ள பரீட்­சை­யா­னது எதிர்­வரும் 13ஆம் திகதி வரை நடை­பெறும். மீண்டும் இரண்டாம் கட்­ட­மாக ஆரம்­பிக்­கப்­படும் பரீட்­சை­யா­னது 24ஆம் திகதி தொடக்கம் செப்­டெம்பர் 8ஆம் திகதி வரை நடை­பெறும்.
இவ்­வ­ருடம் கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை நட­வ­டிக்­கை­களில் 22,000 பேர் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு நாட­ளா­விய ரீதியில் 2,180 பரீட்சை நிலை­யங்­களும் 303 தொடர்­பாடல் நிலை­யங்­களும் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் தொிவித்­துள்­ளது.
பொலிஸ் திணைக்­களம்
இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள கல்வி பொது­த­ரா­தரப் உயர்­த­ரப்­ப­ரீட்­சையில் பரீட்சை நிலை­யங்­க­ளாக செயற்­ப­ட­வுள்ள அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் பரீட்­சைகள் முடி­வ­டையும் வரை 24 மணி­நேர பொலிஸ் பாது­காப்பு வழங்க பொலிஸ் திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
இத­னி­டையே இம்­மாதம் 05 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையும் இடம்­பெ­ற­வுள்­ளது. இவ்­வா­றான நிலையில் அனைத்து பரீட்­சை­களும் இம்­மாதம் 08 ஆம் திகதி முடி­வுக்கு வர­வுள்ளதுடன் பரீட்சை முறை­கே­டுகள் மற்றும் வன்­முறை சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை தடுப்­ப­தற்கே பரீட்சை நிலை­யங்­க­ளாக செயற்­படும் பாட­சா­லை­க­ளுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
இதேவேளை பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வண்ணம் பிரச்சாரங்களை மேற்கொள்ளல் ஒலி எழுப்புதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளும் தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments