உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக குண்டு ஒன்று சிலாபத்தில் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
06/08/2015 .. 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ரெயில்வே பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.
ரயில் ஒன்று ரெயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியை பணியாளர் துப்புரவு செய்த போதே குண்டு வெடித்துள்ளது.
சிறிய பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இந்தக் குண்டு ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments