கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை சுயாதீனமானதும் அமைதியானதுமான தேர்தலொன்றிற்கான சூழல் காணப்படுகின்றது எனவும் திருப்திகரமான சூழலை அவதானிக்க முடிவதாகவும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தேசிய அமைப்பு, பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட தேர்தல்கள் கண்காணிப்பு குழுவினருடன் இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் போன்றன தமது செயற்பாடுகளை எவ்வித தடையும் இன்றி முன்னெடுப்பதை காணமுடிகிறது எனவும் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments