கற்பிட்டியில் இன்று காலை முதல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதில் ஈடுபடுவதை காணக் கூடியதாகவுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையிலும் பதற்றமற்ற நிலையிலும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எந்த வகையான தேர்தல் சம்பந்தமான வன்செயல்களும் இடம்பெறாத நிலைமையில் வாக்களிப்பு அமைதியான முறையில் நடை பெறுவதையும் காணக் கூடியதாகவுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களில் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய
0 Comments