புலிகளை தொடர்புபடுத்தி அரசியல் செய்யும் யுகத்திற்கு எதிர்வரும் 17ஆம் திகதியோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஐ.தே.முன்னணி ஆட்சியில் புலிகளுக்கு இடமில்லை. பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை என உத்தரவாதமளிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தறை வரையிலான மக்கள் ஐ.தே.முன்னணிக்கே வாக்களிப்பார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐ.தே.#முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 19ஆவது திருத்தத்திற்கு அமைய நான்கு வருடங்கள் அதா வது 2020 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.
அதேபோன்று பாராளுமன்றத்திலும் கலைப்பதற்கான எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பதவி வகிப்பார். அவரோடு இணைந்து செயற்படக்கூடிய ஸ்திர மான ஆட்சியை ஐ.தே.முன்னணியி னால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
இன்று எமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் பொய்ப் பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின் றன. புலிகள் மீண்டும் தலைதூக்குவதனாலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின் றன. புலிகள் தொடர்பில் எம்மிடம் இரட்டை வேடம் கிடையாது. யுத்தம் நடைபெற்ற போதும் யுத்தம் முடிந்த பின்னரும் மஹிந்த ராஜபக் ஷ புலிகளுடனும், புலம்பெயர் புலிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்தார்.
இது இரகசியமான விடயமல்ல. ஐ.தே.முன்னணி ஒரு போதும் மீண் டும் புலிகள் தலைதூக்க இடமளிக்காது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலிகளை தொடர்புபடுத்தி அரசியல் செய்யும் யுகத்திற்கு எதிர்வரும் 17ஆம் திகதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப் படும்.
புலிகள் மட்டுமல்ல, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான எந்த சக்திகளையும் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். கடந்த ஆட்சியில் நாட்டுக்குள் வெள்ளைவேன் கடத்தல்கள், கொலைகள், எதனோல் வியாபாரிகள், போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடின.
ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகு நாட்டில் இவ்வாறான அராஜகங்கள் இடம்பெறவில்லை. எனவே இதன் பின்னணியில் யார் இருந்துள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவின் இருண்ட யுகம், நீலப் படை யணியின் பயங்கரவாதம், தாஜுதீன் கொலை, எக் னெலியகொட காணாமல்போமை ஆகியவற்றின் பின்னணியில் இருந்தவர்கள் யாரென்பது எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் மூலம் வெளியாகும். ஒற்றையாட்சி முறைமை பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நாடு பிரியும் என்பது மக்களை ஏமாற்றும் பொய்ப்பிரசாரம்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஐ.தே.முன்னணியினால் மட்டுமே தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடி யும். இத் தேர்தலில் யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தறை வரையில் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள். இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணைக் குழு அறிக்கை வெளியிடவிருந்தது.
அது வெளியிடப்படுவதை தடுத்து கால அவகாசம்பெற எம்மால் முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இவ்வெற்றியை பெற்றோம். மஹிந்த ராஜ பக் ஷ அமெரிக்காவை பகைத்துக் கொண்டது “தேசப்பற்றுள்ள” புத் திக் கூர்மையற்ற தூரநோக்கில்லாத வெளிநாட்டுக் கொள்கையினால் ஆகும்.
நாம் எமது படையினரை பாதுகாப்போம். உள்ளக விசாரணைக்கு இடமளிப்போம். யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்த ராஜபக் ஷவையும், கோத்தபாய ராஜபக் ஷவையும் நாம் பாதுகாப்போம்.
எனவே அவர்கள் எமக்கு வாக் களிக்க வேண்டும். இந்தியா, சீனா உட்பட உலக நாடுகளுடன் நல்லு றவை ஏற்படுத்திக் கொண்டு நாட்டை முன்னேற்றுவோம். தனி யொரு குடும்ப நன்மையல்ல, நாட் டிலுள்ள 55 இலட்சம் குடும்பங்க ளின் நன்மைகருதி எதிர்வரும் 17 ஆம் திகதி தீர்மானம் எடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0 Comments