Subscribe Us

header ads

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு முடி­வுகள் எடுக்­கப்­பட வேண்டும்


நாட்டின் தலை­வர்கள் எடுக்­கின்ற தீர்­மா­னங்கள் நாட்டின் எதிர்­கா­லத்தைப் பாதிப்­ப­தாக அமைந்­து­வி­டக்­கூ­டாது. இந்த விட­யத்தில் மாறி மாறி ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்­களின் தலை­வர்கள் கவ­ன­மாக இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கடந்த காலங்­களில் நாட்டின் தலை­வர்கள் விட்ட தவ­றுகள் தற்­போது சீர்­தூக்கி பார்க்­கப்­ப­டு­கின்­றன. அத்­த­கைய தவ­று­களால் நாடு பெரும் இக்­கட்­டான சூழ்­நி­லையை சந்­தித்­தமை குறித்தும் தற்­போது ஆரா­யப்­ப­டு­கின்­றது.
முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வை முன்­னிட்டு நேற்று முன்­தினம் மாலை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் விசேட நிகழ்­வொன்று இடம் பெற்­றது. இதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட பல முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
இங்கு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டை ஆட்சி செய்த தலை­வர்கள் அர­சியல் நகர்­வுகள் விட­யத்தில் தீர்­மா­னங்கள் எடுக்கும் போது பல­வி­த­மாக செயற்­பட்­டுள்­ளனர். இதன் பிர­காரம் கட்­சி­யி­னதும் நாட்டின் வளர்ச்­சி­யையும் கருத்தில் கொண்டு தீர்­மா­னங்கள் எடுக்­கும்­போது உறு­தி­யாக செயற்­ப­டுவேன் என்று தெரி­வித்­துள்ளார்.
1956 ஆம் ஆண்டு அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய பண்­டா­ர­நா­யக்க நாட்டை குறு­கிய காலமே ஆட்சி புரிந்தார். இருந்­த­போ­திலும் இன்­று­வரை நாட்டு மக்­களின் மனங்­களில் அவர் இடம் பிடித்­துள்ளார். இலங்­கையை ஆட்சி செய்த தலை­வர்கள் கட்­சியின் நகர்­வுகள் குறித்தும் அர­சியல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும், தீர்­மானம் எடுக்கும் போது பல­வி­த­மாக செயற்­பட்­டனர். ஜே. ஆர். ஜய­வர்த்­தன, இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்­திற்கு தனது அமைச்­ச­ர­வையில் மாத்­தி­ர­மின்றி முழு­நாட்­டிலும் எதிர்ப்பு கிளம்­பி­ய­போ­திலும் அவற்றை தாண்டி ஒப்­பந்தம் செய்தார்.
அதைப்­போ­லவே முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாஸ தனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது அதி­லி­ருந்து தன்னைப் பாது­காக்க பல்­வேறு தீர்­மா­னங்­களை எடுத்தார். அதே­போன்றே சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தனது ஆட்­சியின் போது தீர்­மா­னங்­களை எடுக்கும் போது அனை­வ­ரி­னதும் ஆலோ­ச­னைக்கு செவி­ம­டுத்தார் என்றும் ஜனா­தி­பதி தனது உரையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்து தெரி­வித்­த­போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க 2003 ஆம் ஆண்டின் போது அதி­கா­ரத்தை தன்­வசம் வைத்­துக்­கொண்டு நாட்டைப் பற்றி சிந்­திக்­காது கட்­சியை மாத்­திரம் நினைத்து செயற்­பட்­டது போல ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யகப் புரட்­சியை மீளப்­பின்­னோக்கி நகர்த்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முனை­கின்­றாரா என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
2002 ஆம்­ ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­க­வுடன் ஒன்­றாக செயற்­ப­டக்­கூ­டிய சூழல் ஏற்­பட்­டது. இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் அமைச்­ச­ர­வையைக் கொண்டு நடத்­து­வதில் பெரும் சிரமம் ஏற்­பட்­டது. எனினும் நாட்டின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை புறந்­தள்­ளி­விட்டு தனக்கு நாட்­டை­வி­டவும் கட்­சிதான் முக்­கியம் என்ற நிலைப்­பாட்டில் அன்று சந்­தி­ரிகா அர­சியல் தீர்­மா­னத்தை எடுத்தார். அதன் போது அவர் எந்த நிலைப்­பாட்டில் இருந்தார் என்­பது எனக்குத் தெரி­யாது. எனினும் சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் அந்த முடி­வினை எடுக்கும் நிலைமைக்கு அவ­ரைக் கொண்­டு­வந்து சேர்த்­தனர். தற்­போதும் அவ்­வா­றா­னதோர் நிலைமை தோன்­றி­யி­ருக்­கின்­றது. ஆகவே ஜன­வரி 8 ஆம்­ தி­கதி நாட்டில் ஏற்­ப­டுத்­திய ஜன­நா­யகப் புரட்­சியை பின்­நோக்கி செலுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முனை­கின்­றாரா என்­பதை அறி­யப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாக உள்­ளது. ஜன­வரிப் புரட்­சியை பின்­நோக்கி நகர்த்­து­வ­தற்கு சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர் என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்து தெரி­வித்­துள்ளார்.
தற்­போ­தைய நிலையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பட்­டி­யலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்தக் கருத்­தினை முன்­வைத்­தி­ருக்­கின்றார். 2002 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்கம் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை மேற்­கொண்டு சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­தது. நோர்வேயின் அனு­ச­ர­ணை­யுடன் இந்தப் பேச்­சு­வார்த்­தைகள் முன்­கொண்டு செல்­லப்­பட்­டன. அப்­போது ஜனா­தி­ப­தி­யாக சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவே பத­வி­யி­லி­ருந்தார். அன்று அர­சாங்­கத்­திற்கும் தமி­ழீ­ழ­வி­டு­த­லைப்­பு­லி­க­ளுக்­கு­மி­டையே முன்­னெ­டுக்­கப்­பட்ட பேச்­சு­வார்த்­தைக்கு எதி­ராக அன்­றைய எதிர்க்­கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான பொது­ஜன ஐக்­கிய முன்­னணி செயற்­பட்­டது.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டை புலி­க­ளிடம் தாரை­வார்த்­து­விட்­ட­தா­கவும், புலி­க­ளுடன் ஒப்­பந்தம் செய்ததன் மூலம் நாட்டை காட்­டிக்­கொ­டுத்­து­விட்­ட­தா­கவும் எதிர்க்­கட்­சி­யினர் குற்றம் சுமத்­தினர். இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் ஒஸ்­லோவில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது சமஷ்டி முறை­யி­லான தீர்­வுக்கு அர­சாங்­கமும் விடு­த­லைப்­பு­லி­களும் இணங்­கி­யி­ருந்­தன. இவ்­வாறு சமா­தான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது மூன்று அமைச்­சுக்­களை ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த சந்­தி­ரிகா குமா­ர­துங்க பல­வந்­த­மாக தனக்­குக்கீழ் சுவீ­க­ரித்­துக்­கொண்டார். இத­னை­ய­டுத்து ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்­திற்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டையில் முறு­கல்­நிலை ஏற்­பட்­டது. இதன் ஒரு கட்­ட­மாக ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தை கலைத்தார். இதனால் நாட்டில் நல்­லி­ணக்க முயற்­சிகள் அடி­யோடு கைவி­டப்­பட்­டன. மீண்டும் யுத்த சூழல் ஏற்­பட்­டது.
பின்னர் ஜே.வி.பி.யுடன் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தலை­மையில் புதிய அர­சாங்கம் உரு­வா­னது. அன்று ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தை கலைத்­த­மை­யினால் நாட்டில் வேறு­பட்ட ஒரு சூழல் உரு­வா­னது. ஜனா­தி­பதி பத­வியி­லி­ருந்து சந்­தி­ரிகா குமா­ர­துங்க வில­கி­ய­பின்னர் தான் அன்று ஐக்­கிய தேசிய அர­சாங்­கத்தை கலைத்­தமை பெரும் தவறு என்­பதை அவர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அன்று மூன்று அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்­ற­துடன் பாரா­ளு­மன்­றத்தை கலைக்­காது விட்­டி­ருந்தால் நாட்டில் நல்­லி­ணக்க முயற்சி முன்­னேற்றம் கண்­டி­ருக்கும். ஆனால் அதற்­கான சூழல் அன்று சந்­தி­ரிகா குமா­ர­துங்க எடுத்த முடி­வினால் இல்­லாது போனது.
இத­னையே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் இடம்பெற்ற நிகழ்வில் சுட்­டிக்­காட்­டி­ய­துடன் ஜன­வரி 8 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் புரட்­சி­யினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்நோக்கி நகர்த்தினால் எதிர்காலத்தில் கவலைப்படவேண்டிய நிலை ஏற்படும் என்ற தோரணையிலேயே கருத்து தெரிவித்திருக்கின்றார்.

நாட்டின் தலைவர்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும். ஆனால் எமது நாட்டைப் பொறுத்த வரையில் நாட்டின் நலனைவிட கட்சிகளின் நலனைக் கருத்தில் கொண்டே தலைவர்கள் முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதற்கு 2003 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எடுத்த அவசரமான முடிவு தற்போது வரலாற்றுப் பதிவாகியுள்ளது. தற்போதைய நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ எடுக்கின்ற முடிவுகள் நாட்டின் நலனை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. கட்சி நலனும் முக்கியமானதே. ஆனால் அதனை விட நாட்டின் நலன் பெரிது என்பதை தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

Post a Comment

0 Comments