Subscribe Us

அப்துல் கலாமுக்கு யாழ் பல்கலைக் கழகத்தில் அஞ்சலி

யாழ் பல்கலைக் கழக மாணவர்களால், கடந்த திங்கட் கிழமை மாரடைப்பால் மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

பல்கலைக் கழக மாணவர்கள் அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் திபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments