Subscribe Us

header ads

தேர்தலுக்காக அரச வாகனங்களை அமைச்சர்கள் பயன்படுத்தினால் கட்டணம்: ஜனாதிபதி உத்தரவு


காபந்து அரசாங்கத்தின்(இடைக்கால அரசு) அமைச்சர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால், அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு அரச வாகனங்களை பயன்படுத்தினால், கட்டணங்களை அறவிட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்திருந்தார்.

அதேவேளை காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த காவற்துறையினர் அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments