Subscribe Us

header ads

ரணில் ஆட்சிக்கு வந்தால் சிங்கள இனம் அழிந்து விடும் : குண­தாஸ

ரணில் விக்­கி­ரமசிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் மீண்டும் அதி­கா­ரத்­திற்கு வந் தால் எதிர்­கா­லத்தை இந்த நாட்டில் சிங்­கள இனம் இல்­லாமல் போய்­விடும் என தேசிய ஒருங்­க­மைப்பு ஒன்­றி­யத்தின் அமைப்­பாளர் டாக்டர் குண­தாஸ அம­ர­சிங்க தெரி­வித்தார்.


மேலும், நாட்டின் அதி­கா­ரத்தை மஹிந்த ராஜபக் ஷவுக்கு கொடுப்­ப­தற்கு அவரை பிர­ த­ம­ராக்­கு­வது சகல தேசிய சக்­தி­க­ளதும் கட­மை­யாகும் எனவும் தெரிவித்தார்.

தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் மற்றும் தேசிய ஒருங்­க­மைப்பு ஒன்­றி­யத்தின் நிலைப்­பாட்டை தெளிவு­ப­டுத்தல்" எனும் தொனிப்­பொ­ருளில் தேசிய ஒருங்­க­மைப்பு ஒன்­ றியம் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­ தி­யாளர் மாநாடு நேற்று தேசிய நூலக ஆவ­ண­வாக்­கல்­ சபை கேட் போர் கூடத்தில் இடம்­பெற்றது. இதன்­போது கருத்துத் தெரிவிக்கை­ யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
இந்த நாட்டை ஸ்திர­மற்ற நிலைக்கு தள்­ளி­விட்டு அன்று பிர­பா­க­ரனின் பயங்­க­ர­வாத செய­லுக்கு இந்­தியா, அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் மேற்­கத்­தைய நாடுகள் உத­வி­பு­ரிந்து வந்­தன.
இந்த சக்­திகள் தங்­க­ளது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கே முயற்ச்­சிக்­கின்­றன. பிர­பா­க­ரனின் பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர் மேற்­கத்­தைய வாதி­களின் நிகழ்ச்சி நிரல் இருந்­த­தையும் விட தற்­போது முன்­னுக்கு வந்­துள்­ளது. ஏனென்றால் அவர்­க­ளுக்கு தேவை­யான அர­சாங்­கமே அதி­கா­ரத்தில் இருக்­கின்­றது.
மேலும் இந்த அர­சாங்கம் அதி­கா­ரத்­திற்கு வந்­த­துடன் வடக்­கி­லி­ருந்த இரா­ணுவ முகாம்­களை அங்­கி­ருந்து அகற்­றி­யது. புலி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது மற்றும் இந்த நாட்டில் மனித படு­கொலை இடம்­பெற்­ற­தாக விக்­கி­னேஸ்­வரன் கூறிய வார்த்­தை­க­ளுக்கு உந்துசக்தி கொடுத்­தது இவை­ய­னைத்தும் நாட்டை பிரிப்­ப­தற்கே இந்த அர­சாங்கம் ஒத்­து­ழைப்பு கொடுத்து வந்­தது. இவ்­வா­றான நிலையில் மீண்டும் ரணில் விக்­கி­ரமசிங்­கவின் அர­சாங்கம் அதி­கா­ரத்­திற்கு வந்தால் எதிர்­கா­லத்தில் இந்த நாட்டில் சிங்­கள இனம் இல்­லாமல் போய்­விடும்.
எனவே இவற்றை கருத்திற் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை மஹிந்த ராஜபக் ஷவின் கரங்களுக்கு வழங்குவதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவரை பிரதமராக்குவதற்குத் தேவையான நடவ டிக்கைகளை எடுப்பது சகல தேசிய சக்திக ளதும் கடமையாகும் என்றார்.

Post a Comment

0 Comments