எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சம்பிக்க ரணவக்க, மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அன்று அனைத்து வரப்பிரசாதங்களையும் கைதிறந்து மிகவும் போரட்டத்துக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம்.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றினோம். அபிவிருத்திகளையும் மேற்கொண்டோம். ஆனால் கூறிய அனைத்தும் செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அத்துரலிய ரத்தன தேரர், சம்பிக ரணவக்க உள்ளிட பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட உள்ளோம்.
எமக்கு பொதுச் சின்னமொன்றை உருவாக்க நேரகாலம் போதுமானதாக இருக்கவில்லை என்பதால் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளோம் என்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ளமையினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் ராஜித சேனாரட்ன அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எம்.கே.டி.எஸ். குணவர்த்தன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகளான சம்பிக்க ரணவக்க, மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோர் அதிருப்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments