Subscribe Us

header ads

மஹிந்தவை அனுமதித்தமையால் ராஜித,சம்பிக்க,அர்­ஜூன, ஹிருணிகா ஐ.தே.க.வுடன் இணையலாம்


ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் குரு­ணாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்­பு­மனு வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் அதி­ருப்­தி­ய ­டைந்­துள்ள சுதந்­திரக் கட்­சியின் சில அதி­ருப்­தி­யா­ளர்­களும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் பிர­தி­நி­தி­களும் இணைந்துமூன் ­றா­வது அணி­யொன்றை உரு­வாக்கி அதன் ஊடாக தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்­கான முஸ்­தீ­புகள் இடம் பெறு­கின்­றன.

ஒரு­வேளை இவ்­வாறு மூன்­றா­வது அணியை உரு­வாக்­கு­வ­தற்கு முடி­யாது போனால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து எதிர்­வரும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்­பா­கவும் இந்தத் தரப்­பினர் ஆராய்ந்து வரு­வ­தாக தெரி­கி­றது.
ஐக்­கிய தேசிய கட்­சி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் வெற்­றி­பெறும் பட்­சத்தில் சுதந்­திரக் கட்­சியின் அதி­ருப்­தி­யா­ளர்­களும் ஹெலா உறு­ம­யவின் பிர­தி­நி­தி­களும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிடும் சாத்­தியம் உள்­ளது.
குறிப்­பாக மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் வேட்­பு­மனு வழங்­கப்­பட்­டுள்ள விவ­காரம் தொடர்­பாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உப­த­லைவர் ராஜித சேனா­ரட்ண அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க எம்.கே.டி.எஸ். குண­வர்த்­தன மற்றும் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர, ஆகியோர் கடும் அதி­ருப்­தி­யுடன் உள்­ளனர்.
அத்­துடன் மஹிந்­த­வுக்கு வேட்­பு­மனு வழங்­கப்­பட்­டமை தொடர்பில் பாரிய அதி­ருப்­தியில் இருக்­கின்ற ஜாதிக ஹெல உறு­ம­யவின் பிர­தி­நி­தி­க­ளான சம்­பிக்க ரண­வக்க, மற்றும் அத்­து­ர­லிய ரத்­தி­ன­தேரர் ஆகி­யோ­ருடன் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் அதி­ருப்தி குழு­வினர் இணைந்தே இந்த மூன்­றா­வது அணியை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிப்­ப­தாக அர­சியல் வட்­டா­ரங்­களில் நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது.
ஜாதிக ஹெல உறு­ம­யவின் பெயரை மாற்றி புதிய முன்­ன­ணியின் ஊடாக மூன்­றா­வது அணி­யாக தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தேவை­யான ஏற்­பா­டு­களை சம்­பிக்க ரண­வக்­கவும் அத்­து­ர­லிய ரத்­தி­ன­தே­ரரும் கடந்த சில தினங்­க­ளாக மேற்­கொண்­டு­வந்­தனர். இந்த முயற்­சிக்கு அமைச்சர் ராஜித சேனா­ரட்ண மற்றும் அர்­ஜூன ரண­துங்க ஆகியோர் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர்.
இது தொடர்­பான முக்­கிய அறி­விப்பு நேற்­றை­ய­தினம் இடம்­பெ­ற­வி­ருந்த நிலையில் இறு­தி­நே­ரத்தில் அந்த முயற்சி கைவி­டப்­பட்­டது. அதன் பின்­னரே சுதந்­திரக் கட்­சி­யி­னதும் ஜாதிக ஹெல உறு­ம­ய­வி­னதும் முக்­கி­யஸ்­தர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வர்­க­ளுடன் நேற்­றைய தினம் பேச்சு நடத்­தி­யுள்­ளனர்.
இதன்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து பொது சின்னம் ஒன்றின் ஊடாக தேர்­தலில் போட்­டி­யிட இந்த குழு­வினர் விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். எனினும் யானை சின்­னத்தை விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி தயா­ராக இல்லை என்ற விட­யமும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கு­வ­தற்கு ஐ. தே.க. இணங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கை­யி­லேயே மூன்­றா­வது அணியை உரு­வாக்க முடி­யாது போனால் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட அதி­ருப்­தி­யா­ளர்கள் முயற்­சிப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
எவ்­வா­றெ­னினும் இன்னும் சில மணித்­தி­யா­லங்கள், அல்­லது இன்று காலை ஆகும்­போது மூன்­றா­வது அணியா, அல்­லது ஐ.தே.க. வுடன் இணைந்து போட்­டி­யி­டு­வதா என்­பது குறித்த தீர்­மானம் அதி­ருப்­தி­யா­ளர்­க­ளினால் எடுக்­கப்­பட்­டு­விடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் வேட்பு மனு வழங்­கப்­பட்­டமை தொடர்பில் அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க நேற்று முன்­தினம் லண்டன் பய­ண­மானார். எனினும் சில தினங்­களில் நாடு திரும்­ப­வுள்ள சந்­தி­ரிகா குமா­ர­துங்க தற்­போ­தைய அர­சியல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யி­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது ராஜித சேனா­ரட்ண அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எம்.கே.டி.எஸ். குணவர்த்தன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினர்.
இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ராஜித்த சேனாரட்ன இந்த விவகாரத்தில் நாங்கள் நொருங்கிப்போயுள்ளோம். இந்நிலையில் எமது மக்கள் கூறுகின்ற விடயத்தை கேட்டு அதற்கு ஏற்ப நாங்கள் விரைவில் முடிவெடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments