Subscribe Us

header ads

ஹக்கீமின் ஆடை கலைந்தார் ராஜித…?


பாரா­ளு­மன்­றத்தில் 20ஆவது திருத்தம் தொடர்பில் தனது சுயநலம் கரு­தியே தனக் குக் கிடைப்­பது குறைந்து விடும் என்­ப­தற்­கா­கவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூச்­ச­லி­டு­கி­றாரே தவிர சமு­தா­யத்­துக்­காக அல்ல. ஜனா­தி­பதி பதவி கிடைக்­கு­மென்றால் அவர் மதத்­தையே மாற்றிக் கொள்வார் என அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ள­ரான அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
நேற்று மாலை தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­வித்தார்.
20ஆவது திருத்தச் சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட பின்பே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். ஆனால் எப்­போது என இன்னும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்றார்.
அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நல்­லாட்­சியின் பக்கம் இணைந்து கொள்­வ­தற்­காக கடைசி நேரத்­திலே வந்து சேர்ந்தார். நல்­லாட்­சியின் பக்கம் இணைந்து கொள்ளா விட்டால் மக்கள் அவரை வர வேண்டாம் என்றனர்.
மக்­களின் அழுத்­தத்­தி­னாலேயே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் சேர்ந்தார். அத னால் அவ­ருக்கு நல்­லாட்சி பற்றி பெரி­தாக ஒன்றும் தெரி­யாது. அதனால் தான் பல­வா­றெல்லாம் 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கிறார்.
சிறு­பான்மை மற்றும் சிறிய ­கட்­சிகள் 20ஆவது திருத்த சட்ட மூலத்தை ஏன் எதிர்க்­கி­றார்கள் என்று விளங்கவில்லை. இரட்டை வாக்குச் சீட்டு முறைமை வேண்­டு­மென்­கி­றார்கள்.
இரட்டை வாக்குச் சீட்டு முறைமையென்றால் கட்­சிக்கு ஒரு வாக்கும் தான் விரும்­பு­ப­வ­ருக்கு ஒரு வாக்­கு­மாகும்.
இம்முறை மீண்டும் விருப்பு வாக்கு முறை­மைக்கே இட்டுச் செல்லும் விருப்பு வாக்கு முறைமையினாலேயே பணம் படைத்­த­வர்கள் ஊழல் செய்­ப­வர்கள் வெற்­றி­யீட்ட முடி­கி­றது. இதனை இல்­லாமற் செய்­வதே தொகுதி வாரி­யான தேர்தல் முறைமை­யாகும்.
அர­சி­யல்­வா­திகள் தமது சுய­ந­லத்­தையும் இலா­பத்­தையும் எதிர்­பார்க்­கி­றார்கள். இதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். ஊட­கங்­களும் இதற்கு உதவ வேண்டும்.
20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்ப்­ப­தா­கவும் கட்­சிக்குள் நிலவும் உட்­பூ­சல்­களே இதற்குக் காரணம் எனவும் மக்கள் விடு­தலை முன்­னணி கூறுகிறது.
இது தவ­றான கருத்­தாகும். ஐ.தே.கட்­சியே இச்­சட்ட மூலத்தை நிறை­வேற்­று­வதைப் பின்­தள்­ளு­கி­றது.

Post a Comment

0 Comments