Subscribe Us

header ads

மஹிந்­த­வுக்கு இட­ம­ளிப்­பாரா மைத்­திரி?


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வரப்போவது உறு­தி­யா­கி­விட்­டது.
மாத்­த­றையில் கடந்த 12 ஆம் திகதி நடந்த மஹிந்த ராஜபக்ஷவின் விசு­வா­சிகள் நடத்­திய கூட்­டத்­துக்கு, அவர் அனுப்­பி­யி­ருந்த செய்­தியில், பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிடப் போவ­தாக அவர் அறி­வித்­தி­ருந்தார். அந்தக் கூட்­டத்­துக்குச் சென்று முகம் காட்டி விட்டுச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ மேடையில் ஏற­வில்லை. அடுத்த பேர­ணியில் தாம் மேடை­யே­ற­வுள்­ள­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிடப் போவ­தா­கவே, மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.
என்­றாலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் தலை­வ­ராக சுமார் பத்­தாண்டு காலம் பத­வியில் இருந்த அவ­ருக்கு, பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­வது யார்? என்­பதைத் தீர்­மா­னிக்கும் உரிமை, யாருக்கு உள்­ளது என்­பது கூடத் தெரி­யாமல் இருப்­பது வேடிக்­கை­யான விடயம்.
அதா­வது, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் தலைவர் தான், வேட்­பா­ளர்­களை நிறுத்தும்- இறுதி முடி­வெ­டுக்கும் அதி­காரம் கொண்­டவர்.
அந்­த­வ­கையில், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே, மஹிந்த ராஜபக் ஷவை போட்­டி­யிட அனு­ம­திக்­க­லாமா? இல்­லையா? என்­பதை தீர்­மா­னிக்க முடியும். அதை­விட, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் பிர­தமர் வேட்­பா­ளரை முன்­னி­றுத்தி பிர­சாரம் செய்யும் வழக்­கமும் இதற்கு முன் இருந்­தது கிடை­யாது.

இவற்றைத் தெரிந்து கொண்டோ தெரி­யா­மலோ, மஹிந்த ராஜபக் ஷ ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராகக் கனவு காண்­கிறார். முன்னர், மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வது பற்றி வெளிப்­ப­டை­யாக கருத்து வெளி­யி­டு­வதைத் தவிர்த்து வந்த அவர், இப்­போது, பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிடப் போவ­தாக வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருக்­கிறார்.
அதே­வேளை, எந்த மாவட்­டத்தில் இருந்து போட்­டி­யி­டு­வ­தென்று இன்­னமும் முடிவு செய்­ய­வில்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார்.
மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான கட்­சி­யிலோ, கூட்­ட­ணி­யிலோ, போட்­டி­யிட விரும்பும் அவர், தானே இன்­னமும் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருப்­பது போன்று கருத்­துக்­களை வெளி­யி­டு­வது அவ­ரது அர­சியல் கோமா­ளித்­த­னத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

ஆனாலும், அவர் அந்தக் கோமா­ளித்­த­னத்தைச் செய்­கிறார் என்றால், அதற்குக் காரணம், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் அவ­ருக்கு இருக்­கின்ற செல்­வாக்குத் தான்.சுமார் 100 வரை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ­ரது பக்கம் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.
இதனை வைத்து அவர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­யுடன் பேரம் பேசலாம் என்று எதிர்­பார்க்­கிறார்.அந்தப் பேரம் பேசலின் ஊடா­கவே தனக்­கான பிர­தமர் வேட்­பாளர் தகு­திநி­லையை உரு­வாக்கிக் கொள்­ளலாம் என்­பது அவ­ரது திட்டம்- எதிர்­பார்ப்பு.ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில், மஹிந்த ராஜபக் ஷ வினால் சூடு­கண்ட பூனை அவர்.
அவர் மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு மட்­டு­மன்றி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராகக்கூட நிறுத்­து­வ­தற்கு தயா­ராக இல்லை என்றே செய்­திகள் கூறு­கின்­றன.
மஹிந்த ராஜபக் ஷவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரா­கவோ, பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவோ மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறுத்­து­வா­ரே­யானால், அது அவ­ருக்கு மக்கள் அளித்த ஆணைக்கு முர­ணான செய­லாக இருக்கும்.மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வ­ளித்த பெரும்­பான்­மை­யான மக்கள், மஹிந்த ராஜபக் ஷவைத் தூக்­கி­யெ­றிய விரும்­பி­ய­வர்கள்- அவ­ரது அடக்­கு­முறை ஆட்­சியை எதிர்த்­த­வர்கள்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்கு எதி­ரான அந்த அலை தான் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வான ஒரு அணியை உரு­வாக்கி வலுப்­ப­டுத்தி, அவ­ரையும் வெற்­றி­பெற வைத்­தி­ருந்­தது.இப்­ப­டி­யான நிலையில், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வ­தற்கு எந்த வகை­யி­லா­வது துணை­போ­வா­ரே­யானால், அது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஒரு வர­லாற்றுக் கறையை ஏற்­ப­டுத்தும்.
ஏனென்றால், மைத்­தி­ரி­பால சிறி­சேன தாம் ஜனா­தி­பதி பத­விக்­காக மீண்டும் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று அறி­வித்­தி­ருக்­கிறார்.அதே­வேளை, அவர் மீண்டும் ஒரு இருண்ட யுகத்­துக்குள் நாட்டைத் தள்­ளி­வி­டாத வகையில் செயற்­படும் பொறுப்பு அவ­ரிடம் இருப்­பதை தட்­டிக்­க­ழித்து விட முடி­யாது.
மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்­த­வ­கை­யி­லா­வது இட­ம­ளிப்­பா­ராக இருந்தால், அது வர­லாற்றில் அவர் செய்த மிகப்­பெ­ரிய தவ­றா­கவே பார்க்­கப்­படும்.

அதை­விட, யாரெல்லாம் மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விக்கு வரு­வ­தற்கு துணை­யாக நின்­றார்­களோ, ஒத்­து­ழைத்­தார்­களோ அவர்­களின் ஆத­ரவை இழக்க நேரிடும் என்­ப­துடன், சர்­வ­தேச சமூ­கத்தின் எதிர்ப்­பையும் சம்­பா­திக்க நேரிடும்.மஹிந்த ராஜபக் ஷவை முன்­னி­றுத்­து­வதால். மைத்­தி­ரி­பால சிறி­சேன இத்­த­கைய சிக்­கல்­களை மட்டும் எதிர்­கொள்ள நேரி­டாது.ஒரு­வேளை மஹிந்த ராஜபக் ஷ பிர­தமர் ஆகி­விட்டால், அதன் விளை­வு­களை அதி­க­மாக அனு­ப­விக்கப் போகி­ற­வரும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வா­கவே இருப்பார்.
ஏனென்றால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருந்த நிறை­வேற்று அதி­கா­ரங்கள் பல 19ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம் இல்­லாமல் செய்­யப்­பட்டு விட்­டது.

எனவே, அடுத்த பாரா­ளு­மன்­றத்தில், பிர­தமர் கூடிய அதி­காரம் படைத்­த­வ­ராக இருப்பார்.அந்த வகையில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் பெரும் பனிப்போர் ஒன்று உரு­வாகும் வாய்ப்பு ஏற்­ப­டலாம்.2001ஆம் ஆண்டு பத­விக்கு வந்த ஐ.தே.க. அர­சாங்கம், ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரி­கா­வுடன் பல சந்­த­ரப்­பங்­களில் மோதி­யது.
அப்­போது நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்த சந்­தி­ரிகா ஒரு கட்­டத்தில், முக்­கிய அமைச்­சுக்­களை பறித்துக் கொண்­ட­துடன், பாரா­ளு­மன்­றத்தை கலைத்து விட்டார்.
ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அவ்­வாறு செய்ய முடி­யாது.ஏனென்றால் பாரா­ளு­மன்­றத்தை நான்­கரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அவரால் கலைக்க முடி­யாது. அதற்­காக அதி­காரம் பறிக்­கப்­பட்டு விட்­டது.

அதை­விட, தன்­னிடம் எஞ்­சி­யி­ருக்கும் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்டு, மஹிந்த ராஜபக் ஷவை அடக்­கவும் முடி­யாது.அது நிறை­வேற்று அதி­கா­ரத்தை தவ­றாகப் பயன்­ப­டுத்­து­வ­தான குற்­றச்­சாட்டை மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது சுமத்தும்.நல்­லாட்­சியை நிறு­வு­வ­தாக உறு­தி­ய­ளித்து பத­விக்கு வந்த அவர், தனது அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்­றத்தின் மூலம் தெரி­வான பிர­தமர் மீது செலுத்­து­வது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயரைக் கெடுத்து விடும்.
எனவே, மஹிந்த ராஜபக் ஷ பிர­தமர் பத­வியைக் கைப்­பற்­றினால், மைத்­தி­ரி­பால சிறி­சேன விட்டுக் கொடுத்து அடங்கிப் போக வேண்­டிய நிலையே ஏற்­படும்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில், பல்­வேறு நெருக்­க­டிகள் அழுத்­தங்­களை எதிர்­கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன, அது­போன்ற நிலைக்கு தன்­னையும், நாட்­டையும் தள்­ளி­வி­டு­வ­தற்கு விரும்­ப­மாட்டார்.மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­பா­ராமல் பத­விக்கு வந்­தி­ருந்­தாலும் அவ­ரது எளி­மை­யான அணு­கு­மு­றைகள், நாட்டு மக்­களைக் கவர்ந்­தி­ருக்­கி­றது. வெளி­நா­டு­க­ளையும் மதிக்க வைத்­தி­ருக்­கி­றது.

அதி­காரப் பசி கொண்­ட­வ­ராக தன்னைக் காட்டிக் கொள்­ளாத அவ­ரது பண்பு பெரிய புகழைத் தேடிக் கொடுத்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.இந்­த­நி­லையில், அந்தப் புகழைக் கெடுத்து விடாமல் பாது­காத்துக் கொள்ளும் பொறுப்பும் அவ­ருக்கு இருக்­கி­றது.மஹிந்த ராஜபக் ஷவுக்கு இட­ம­ளிக்கப் போனால், வீண் சர்ச்­சை­க­ளிலும் முரண்­பா­டு­க­ளிலும் சிக்கிக் கொண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன பழி­களைச் சுமக்க நேரி­டலாம்.
எனவே, இருக்கும் பெயரைக் காப்­பாற்றிக் கொள்ள வேண்­டிய பொறுப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருக்­கி­றது.இதனால் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­வ­தற்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு­போதும் வாய்ப்­ப­ளிக்­க­மாட்டார் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.ஆனாலும், மாற்று அணியொன்றை நிறுவி பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடும் கனவு மஹிந்தவிடம் இருந்து போகவில்லை.
அதற்கான தயார்படுத்தல்களில் அவர் இறங்கியிருப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன.மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த பாராளுமன்றத் தேர்தல் மூன்று அணிகளுக்கிடையிலான போராக மாறும் சூழலே அதிகமாக உள்ளது.
ஏற்கனவே உள்ள ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணிகளுடன், மகிந்த ஆதரவு அணியும் தனியாக களமிறங்கலாம்.

இது சுதந்திரக் கட்சியினது வாக்கு பிரிந்து போகும் சூழலை நிச்சயம் ஏற்படுத்தும்.அது ஐ.தே.க. வுக்கு வாய்ப்பாக அமையும் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் கணக்கு.
அந்தக் கணக்கு பலிக்குமா என்ற கேள்விக்கு பாராளுமன்றத் தேர்தல் பதிலளிக்கும்.

Post a Comment

0 Comments