Subscribe Us

header ads

வாய் ­நாற்­றத்தைப் போக்கும் புதினா


புதினா கீரையை மணத்­துக்­காகவும் சுவைக்­கா­கவும் உணவுப் பொருட்­களில் சேர்ப்­ப­துண்டு. இதில் நீர்ச்­சத்து, புரதம், கொழுப்பு, கார்­போ­ஹை­தரேட், நார்ப்­பொருள் உலோ­கச்­சத்­துக்கள் ெபாஸ்­பரஸ், கல்­சியம், இரும்­புச்­சத்து, விற்றமின் ஏ, நிக்­கோட்­டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்­துக்­களும் அடங்­கி­யுள்­ளன.
புதினா சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்­ப­டுத்­தி­னாலும் இதன் பொது குணங்கள் மாறு­வ­தில்லை என்­பது இதன் முக்­கிய அம்சம்.
அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்­களை எளிதில் ஜீர­ண­மாக்­கு­கி­றது, இரத்தம் சுத்­த­மாகும்.
வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்­சிக்கல் நீங்கும். பெண்­களின் மாத­வி­லக்குப் பிரச்­சினைகள் தீர புதி­னாக்­கீரை உத­வு­கின்­றது. இதை துவை­ய­லாக செய்து சாப்­பிட்டால் வயிற்­றுக்­கோ­ளா­றுகள் அகலும், கடு­மை­யான வயிற்றுப் போக்­கினை நிறுத்தும் சக்தி புதி­னா­வுக்கு உண்டு.
கர்ப்­பி­ணி­ பெண்­க­ளுக்கு அடிக்­கடி வாந்தி ஏற்­ப­டு­வதை தடுக்­கவும் இதனை பயன்­ப­டுத்­து­வது உண்டு.
புதினா இலை­களை சுத்தம் செய்து நைத்து நீர் விட்டு நீரை பாதி­ய­ளவு சுண்­டக்­காய வைத்து வடி­கட்டி வைத்­துக்­கொள்­ள­வேண்டும்.
சிறு குழந்­தை­க­ளுக்கு வயிற்­று­ப்போக்கு, வாந்தி இருந்தால் இந்தப் புதினா கசா­யத்தில் வேளைக்கு இரண்டு தேக்­க­ரண்டி அள­வுக்கு இரண்டு வேளை கொடுத்தால் நல்ல குணம் தெரியும். புதி­னாவை நீர் விடாமல் அரைத்து வெளி உப­யோ­க­மாகப் பற்றுப் போட்டால், தசை­வலி, நரம்­பு­வலி, தலை­வலி, கீல்­வாத வலி­களின் வேதனை குறையும். ஆஸ்­து­மா­வையும் புதினாக் கீரை கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது.
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகி­ய­வற்­றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்­தாகப் பயன்­ப­டு­கி­றது. முகப்­பரு உள்­ள­வர்­களும், வறண்ட சருமம் உள்­ள­வர்­களும் இதன் சாற்றை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும். புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து தேநீருக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments