Subscribe Us

header ads

ஏறாவூர் மாக்கான் மாக்காருக்கு முதலமைச்சரால் மாடிக்கட்டிடம்


மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் வலைய மாக்கான் மாக்கார் வித்தியாலத்திற்கு மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் எம்.எம்.மொஹிடீன் தலைமையில் இடம்பெற்றது.

950 மாணவர்களுடன் இயங்கிவரும் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் ஏற்பட்டிருக்கும் கட்டிடப் பற்றாக்குறை சம்மந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பாடசாலை நிருவாகம் எடுத்துக்கூறியதை அடுத்து முதலமைச்சரால் அப்பாடசாலைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (28) காலை 9 மணிக்கு பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,  கெளரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் ஏராவூர் வலையக் கல்வி அதிகாரி கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

-CM Media-







Post a Comment

0 Comments