முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டை ’இந்தியாவின் தடுப்பு சுவர்’ என்று வர்ணிப்பார்கள். அந்த தடுப்பு சுவர்தான் பல நாடுகளின் (கிரிக்கெட் போட்டிகள்) தாக்குதலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றி, இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாயிருந்தது.
இப்போது இந்தியாவின் வருங்கால வெற்றிக்குக் காரணமாக, 2 குட்டி சிங்கங்கள் வெறித்தனமாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த சிங்கங்கள் ட்ராவிட்டின் மகன்களான சமித் மற்றும் அன்வய்.
இருவரும் கடந்த வெள்ளி அன்று மும்பையின் ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் அசால்ட்டாக டைவ் அடித்து ப்ராக்டீஸ் செய்தது, பல சர்வதேச வீரர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய வீரர் ’ஸ்டீவ் ஸ்மித்’ இருவருக்கும் சில கிரிக்கெட் டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
அப்பா டிராவிட் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆலோசகராக இருப்பதால், அவருடன் சர்வதேச மைதானங்களை வலம் வந்து எப்போதும் கிரிக்கெட்..கிரிக்கெட்..கிரிக்கெட் என்று, இருவரும் கிரிக்கெட்டையே சுவாசித்து வருகின்றனர்.
ட்ராவிட் தன் 12-ம் வயதிலிருந்து கிரிக்கெட் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். சமிதுக்கு வயது 9, அன்வய்க்கு வயது 6 என்பதை நினைவில் கொள்க....
0 Comments