Subscribe Us

header ads

மட்டக்களப்பு கோறளைப்பற்றில் காணி உறுதியற்றோரு உறுதி வழங்கல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதி இல்லாமல் இருந்த கோறளைப்பற்று மேற்கு கிராம மக்கள்  52 பேருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு நாளை (27) கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் மாலை 3.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற இருக்கிறது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி தேவி சார்ள்ஸ், அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் காணி உறுதிகள் இல்லாமல் இருக்கும் மக்களின் காணிகளுக்கு சரியான தீர்வினைப்பெற்று உறுதிகளை வழங்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments