மகிந்த ராஜபக்ஷ நண்பர்களை பிரித்து அரசியல் அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தியது போல ராணுவ வீரர்களை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பதை வைத்தியசாலைக்கு அனுப்பிபரிசோதனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட அவர் எமது நாட்டை கொள்ளையடித்த குடும்பத்துக்கு மக்கள் சிறந்த பாடத்தை புகட்டியுள்ளார்கள் தோற்றுப்போனவர் வாய் மூடி இருக்கவேண்டும் .முன்னைய ஆட்சியில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ராணுவத்தை கீழ்த்தரமாக நடத்தினார்கள் காலைவர,பாதைகளை ,வடிகான்களை சுத்தம் செய்யவே அவர்களை பயனடுத்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments