Subscribe Us

header ads

வென்னப்புவவில் கசிப்பு நிலையம் முற்றுகை; இருவர் கைது

-எம்.எஸ்.முஸப்பிர் 


வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போலவத்தை பிரதேச ஜின்ஓயாவின் கரையோரத்தில்; இயங்கிவந்த  சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்ததாக புத்தளம் பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (18) முற்றுகையிட்டதுடன், அங்கிருந்து 16 கோடா பரல்கள், நான்கு செப்புக்கம்பிச் சுருள்கள் உள்ளிட்ட  பொருட்களை கைப்பற்றியதாகவும் அவர்கள் கூறினர். 

இந்தச் சந்தேக நபர்கள் இருவரும்  கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கடந்த சில மாதங்களாக  கூலிக்கு  பணியாற்றி வந்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். 

Post a Comment

0 Comments