Subscribe Us

header ads

எனது தந்தையாரின் வீட்டுத்திட்டம் ஆட்சி மாற்றத்தால் சீர்குலைக்கப்பட்டது


ஏழை எளிய மக்­களைக் கருத்திற் கொண்டும் வீடற்­ற­வர்­க­ளுக்கு வீடு­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கு­மான திட்டம் ஒன்­றி­னையே எனது தந்­தையார் அமரர் ரண­சிங்க பிரே­ம­தாச முன்­வைத்து செயற்­ப­டுத்தி வந்தார். சர்­வ­தே­சமே ஏற்று வர­வேற்ற இத்­திட்டம் பின்னர் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தால் சீர்குலைக்­கப்­பட்டு விட்­டது. அதே திட்­டத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வீடற்­றோ­ருக்கு வீடு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­பதே எமது பிர­தான இலக்கு என வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தா தெரி­வித்தார்.
கண்டி மலைநாட்டு கலா­சார மண்­ட­பத்தில் நடை­பெற்ற வீடுகள் நிர்­மா­ணிக்கும் திட்­டத்தின் அடிப்­ப­டையில் கண்டி பிர­தே­சத்தில் தெரிவு செய்­யப்­பட்ட ஆயிரம் பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியும் அதற்­கான உறு­திப்­பத்­திரம் என்­ப­வற்றை கைய­ளிக்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரே­ம­தாஇவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,
எனது தந்­தையின் தலை­மைத்­து­வத்­தாலும் வழி­காட்­ட­லாலும் வீடற்­ற­வர்­க­ளுக்கு வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுக்கும் திட்டம் வெற்­றி­க­ர­மாக நடை­பெற்­றது.
தேசிய ரீதி­யா­கவும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் இத்­திட்டம் வர­வேற்­கப்­பட்­டது. அதன் பின்னர் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தால் இத்­திட்டம் சீர்­கு­லைந்­தது.
ஆனால் இன்று இவ்­வ­மைச்சு எனது பொறுப்பில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இன்­று­வரை எந்­த­வொரு அமைச்சும் செய்­யாத அளவில் நாட்டில் வீடற்றோர் பிரச்­சி­னையைத் தீர்ப்­பதே எனது நோக்­க­மாகும்.
நான் எனது மாத வேத­னத்தை பெற்றுக் கொள்­வ­தில்லை. அரச வாக­னங்­களை பயன் படுத்­து­வ­தில்லை. எரி­பொருள் காசு­களைப் பெறு­வ­தில்லை. இவை­ய­னைத்­தையும் வறிய மக்­களின் வீடற்ற பிரச்­சி­னை­களைத் தீர்க்­கவே செல­வி­டு­கின்றேன்.
கடந்த ஆட்சி காலத்தில் அரச சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்­டன. இன்று அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­பனம் வங்­கு­ரோத்து நிலைக்கு வந்­துள்­ளது. 80 ஆயிரம் ரூபா வீத வாட­கைக்கு 33 வாக­னங்­களை அமர்த்திக் கொண்டு அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டது. இது மிகவும் வெறுக்­கத்­தக்க செய­லாகும். இது நாட்­டிற்கு ஏற்­ற­தல்ல.
நான் எவ்­வித வாக­னங்­க­ளையும் கூலிக்கோ அரசு சேவை­க­ளுக்கோ அமர்த்­த­வில்லை. மக்­க­ளுக்கு உகந்த சிறந்த சேவையை செய்து கொண்டு போகையில் சிலர் என் மீது தவ­றான விமர்­ச­னங்­களை மேற்­கொள்­கின்­றனர்.
தேர்தல் சம­யங்­களில் கொடிக்­கம்­பங்கள் முதல் பிர­சார வேலை­க­ளுக்­காக கோடிக்­க­ணக்­கான அரசு நிதி வளங்­களை செல­விட்­ட­வர்­களே இவ்­வாறு விமர்­சிக்­கின்­றனர். இது வேடிக்­கை­யா­னது.
நமது நாட்டில் 51 இலட்சம் குடும்­பங்கள் இருக்­கின்­றன. 21 இலட்சம் குடும்­பத்­தினர் குறைந்த வரு­மா­ன­மு­டை­ய­வர்கள்.
இவர்­க­ளது வீட்­டு­ரி­மைக்­கா­கவும் வாழ்க்கை மேம்­பாட்­டிற்­கா­கவும் எத்­த­கைய தடைகள் ஏற்­பட்­டாலும் அவர்­க­ளுக்­காக நடை­பெ­று­கின்ற எந்தப் பணி­க­ளையும் நிறுத்தப் போவதில்லை.
நாங்கள் அனைத்து வேலைகளையும் மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வோம். உதவித்திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிப்போருக்கு அனைத்து மூலப் பொருட்களையும் மலிவு விலையில் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என்றார்.

Post a Comment

0 Comments