Subscribe Us

header ads

பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்

Abusheik Muhammed


1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர். 

2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை , பயணம் செய்யும் சுதந்திரம் ,கல்வி பெறும் உரிமையை முற்றிலுமாக மறுத்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் 

3.ரோஹிங்யா முஸ்லிம்கள் புத்த பெரும்பான்மை மக்களால் திட்டமிட்ட பிரச்சினைகள் மற்றும் தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றார்கள் 

4.கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படகினால் தப்பித்து செல்ல முயன்றோர் எண்ணிக்கை  120000 பேர் . 

5.அருகே உள்ள நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் தரவில்லை 

6.ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்த் நாடுகளுக்கு முன்னேறினார்கள் .தாய்லாந்த் கடல் படை அவர்களை திருப்பி அனுப்பியது 

7.அதிகமான மக்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா மற்றும் இந்தோனேசியா சென்று தஞ்சம் அடைந்தனர் 

8.மலேசியா அருகே உள்ள செல்வந்தர் நாடு மற்றும் திறமை குன்றிய தொழிலார்கள் குறைவாக உள்ள நாடு.மேலும் இவர்களை உள்ளே அனுமதித்தால் சமூக அமைதி சீர்குலைவு ஏற்படும் என்ற எண்ணத்தில் ரோஹிங்கியா கப்பலை திருப்பி இன்னும் அனுப்புகின்றார்கள் . 

9.இந்தோனேசிய நாடும் கட்டுபாடற்ற வருகையை எச்சரிக்கை செய்து வருகின்றது 

10. 8000 அகதிகள் படகில் தனியே கடலில் தனியே சிக்கி கொண்டு தத்தளிக்கின்றார் .மனித உரிமை அமைப்புகள் இதனை மனித உயிர்களோடு விளையாடும் கொடிய விடயமாக உற்றுநோக்குகின்றது .

Post a Comment

0 Comments