Subscribe Us

header ads

நாய்­க­ளுக்கு அனு­மதி மறுப்பு: 4 மாதங்­க­ளாக காரி­லேயே வசிக்கும் பெண்


குடி­யி­ருப்பில் நாய்­க­ளுக்கு அனு­மதி மறுத்­ததால் பெண் ஒருவர் 4 மாதங்­க­ளாக காரி­லேயே வசித்து வரு­கிறார்.

ஐரோப்­பாவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 8 ஆண்­டு­க­ளாக ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றியவர் ஹிலாரி பாரோஸ்.
இவர் கடந்த ஜன­வரி மாதம் வேலை தேடி இங்­கி­லாந்தின் கென்ட் நக­ருக்கு சென்­றுள்ளார். அங்கு வேலை கிடைக்­கா­ததால் அவ­ரது கையில் இருந்த பணம் முழு­வதும் செல­வா­னது. இதனால் அவ­ருக்கு தங்க இடம் கிடைக்­க­வில்லை.
இந்­நி­லையில் அவ­ச­ர­கால விடுதி அவ­ருக்கு ஒதுக்­கப்­பட்­டது. ஆனால் அங்கு வளர்ப்பு பிரா­ணி­க­ளுக்கு அனு­மதி இல்லை என்­பதால் தனது நாய்­க­ளுடன் தனியார் நிறு­வ­னத்தின் கார் நிறுத்­தி­வைக்கும் இடத்தில் தனக்கு சொந்­த­மான காரி­லேயே வசித்து வரு­கிறார்.


இது பற்றி அவர் கூறு­கையில், இங்­கி­லாந்­திற்கு வரும்­போது எனது கையில் பணம் இருந்­தது. ஆனால், வீடு எடுத்து தங்­கி­யதால் அனைத்தும் செல­வாகி விட்­டது. அவ­சர கால தங்கும் விடு­தியில் எனது நாய்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டதால் எனது காரி­லேயே வசித்து வரு­கிறேன்.
மேலும் நான் காரில் வசிப்­பதால் எனக்கு வேலை தரு­வ­தற்கு யாரும் தயா­ராக இல்லை. எனினும் நான் எனது நாய்கள் ரோப்பீ(Robbie) மற்றும் க்ளியோவை (Cleo) விட்டு தனி­யாக வசிக்க மாட்டேன் எனத் தெரி­வித்­துள்ளார்.
இந்­நி­லையில் கோ ஃபண்ட் மீ என்ற பெயரில் இவர் ஆரம்­பித்­துள்ள முகா­மிற்கு ஏரா­ள­மானோர் நிதி அளித்­துள்­ளனர். இதனால் சில வாரங்களில் வீட்டில் தங்குவதற்கான பணம் கிடைத்து விடும் என அவர் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments