Subscribe Us

header ads

இன்னும் 10 நாட்களில் பாராளுமன்றம் வரும் 20ம் திருத்தம்


புதிய தேர்தல் முறை உள்ளடக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை எதிர்வரும் 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தேர்தல் முறை தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சி தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் அத்தீர்மானம் எதிர்வரும் 13ம் திகதி அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொண்டு அன்றைய தினமே வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதோடு 19ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments