Subscribe Us

header ads

புரிகிறதா இவர்களது நிலை


தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள், மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்ற நம் நாட்டு பணிப்­பெண்கள் என்ற இரு தரப்­புக்­களைச் சேர்ந்த உண்­மை­யான உழைப்­பா­ளர்­க­ளுக்கு மத்­தியில் ஆடைத் தொழிற்­சாலை எனும் நிறு­வ­னத்­துக்கு உழைப்பு என்ற பெயரில் பிழிந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற யுவ­திகள் தொடர்பில் பெரி­தாக எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தாக இல்லை.

தோட்டத் தொழி­லா­ளர்­களை பொறுத்­த­வ­ரையில் அதி­காலை 5 மணிக்கு இரு­ளோடு எழுந்து இர­வினில் 11 மணி­யாகும் வரை­யிலும் பம்­ப­ரமாய் சுழன்று கொண்­டி­ருக்கும் ஓர் நிலையில் நாட்­க­ளையும் வாரங்­க­ளையும் மாதங்­க­ளையும் வரு­டங்­க­ளையும் கடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.
தோட்டத் தொழி­லா­ளர்கள் நாட்­களைக் கடத்திக் கொண்­டி­ருக்­கின்­ற­னரே தவிர அவர்கள் எந்த விதத்­திலும் பூர­ணத்­து­வ­மா­ன­தொரு வாழ்க்­கையை வாழ­வில்லை என்று கூறு­வது தான் பொருத்­த­மாக இருக்கும். இவர்­க­ளது இந்­நி­லை­மை­யா­னது அவர்­க­ளோடே ஒத்துப் போன­தொன்­றா­கவும் ஆகி விட்­டது.
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளது நிலை­மைகள் இவ்­வா­றி­ருக்கும் அதே­வேளை மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­களின் நிலை­மைகள் இன்னும் மோச­மா­ன­வை­க­ளா­கவே இருக்­கின்­றன.
மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு எமது நாட்டு பெண்­களும் யுவ­தி­களும் வீட்டு வேலை செய்­வ­தற்கும் துணிகள் துவைப்­ப­தற்கும் இன்னும் இன்­னோ­ரன்ன வேலை­க­ளுக்கும் துன்ப துய­ரங்­க­ளுக்கும் உள்­ளா­வ­தற்­கு­மென்றே அங்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றனர்.
ஏழ்மை, வரு­மா­னக்­கு­றைவு, பொரு­ளா­தார சூழல், எதிர்­காலம் ஆகி­ய­வற்றை மன­திற்­கொண்டு பல்­த­ரப்­பட்ட கன­வு­க­ளுடன் செல்­கின்ற எமது உற­வுகள் அங்கு எத்­துணை துன்­பங்­களை அனு­ப­விக்­கின்­றனர் என்­பது அறி­விற்கு சாத்­தி­யப்­ப­டா­த­தாகும். அத்­துடன் இவர்கள் தமது ஒப்­பந்த காலப்­ப­கு­திக்குள் எதிர்­கொள்­கின்­ற­வற்றை சொல் ஆறுதல் பெறு­வ­தற்குக் கூட யாரு­மில்லா துர்ப்­பாக்­கி­ய­வ­தி­க­ளாக இருப்­பதும் தெரிந்த விட­யமே.
இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்கள் ஏற்­று­மதி நிறுத்­தப்­பட வேண்டும் என்­ப­துடன் அவ்­வ­கை­யான அனைத்து வித ஊக்­கு­விப்­புக்­களும் இல்­லாது செய்­யப்­ப­டுதல் அவ­சி­ய­மாக உள்­ளது.
மத்­திய கிழக்­குக்கு பணிப்­பெண்கள் அனுப்­பப்­ப­டு­வ­தாலும் அங்கு அவர்கள் எதிர்­கொள்­கின்ற விட­யங்­க­ளாலும் ஏற்­ப­டு­கின்ற பின் விளை­வுகள் தொடர்பில் அர­சாங்­கம் பொறுப்­புள்ள நிறு­வ­னங்கள், அதி­கா­ரிகள் என சகல தரப்­பி­ன­ருமே அறிந்­தி­ராத விட­ய­மல்ல. எனினும் ஏதோ­வொரு அக்­க­றை­யீனம் தொடர்ந்தும் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கி­றது.
தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் மத்­திய கிழக்­குக்கு செல்லும் வீட்­டுப்­பணிப் பெண்கள் எனும் இரு தரப்­பி­னரும் கல்­வித்­த­ரா­தரம் பாராத கூலி­க­ளா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றனர். இவர்­க­ளது உழைப்பு சுரண்­டப்­ப­டு­கி­றது. சுரண்­டப்­ப­டு­கின்ற உழைப்பு நாட்டின் வரு­மா­னத்­துக்கு அவ­சி­யப்­ப­டு­கி­றது. ஆகவே தான் இந்த மக்கள் மீது செலுத்­தப்­ப­டு­கின்ற அழுத்­தங்கள் தொடர்பில் அலட்­டிக்­கொள்­ளப்­ப­டாத நிலை­மைகள் இருந்து வரு­கின்­றன.
மேற்­படி இரு சாராரின் நிலைமை இவ்­வா­றி­ருக்க,உள்­நாட்­டுக்குள் ஆடைத் தொழிற்­சா­லை­க­ளுக்குள் ஆடை உற்­பத்தி எனும் ஏற்­று­மதி வியா­பா­ரத்தை விருத்தி செய்து கொண்­டி­ருக்கும் மற்­று­மொரு தரப்­பி­னர்தான் அப்­பாவி யுவ­தி­க­ளாவர்.
ஆடைத்­தொ­ழிற்­சாலை என்­ற­தொரு துறையை ஆரம்­பித்து வைத்து நாட்டின் தொழிற்­று­றைக்கும் ஏற்­று­மதித் துறைக்கும் வித்­திட்ட முன்னாள் ஜனா­தி­பதி அமரர் ரண­சிங்க பிரே­ம­தாச நாடு குறித்து சிந்­தித்­தி­ருந்தார்.
நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை அடிப்­ப­டை­யாக வைத்து நல்ல நோக்­கத்­தோடு ஸ்தாபிக்­கப்­பட்ட ஆடைத் தொழிற்­றுறை­யா­னது மனித வலு­வையும் இன்று இயந்­தி­ரங்­க­ளாக இயங்கச் செய்­வதன் மூலம் அவர்கள் உட­ல­ளவில் பிழிந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றனர்.
இலா­பத்தை மட்­டுமே இலக்­காகக் கொண்டு செயற்­ப­டு­வதே முத­லா­ளித்­துவக் கொள்கை என்­பதை எவ­ராலும் மாற்­றி­ய­மைத்து விடக்­கூ­டாது என்­பதில் ஒரு­மித்து செயற்­ப­டு­வது தெளி­வா­ன­தாக இருக்­கி­றது.
தோட்­டத்­தொழில் புரியும் தோட்டத் தொழி­லா­ளர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் மற்றும் ஆடைத் தொழிற்­சா­லையில் பிழி­யப்­ப­டு­கின்ற யுவ­திகள் என்ற இந்த மூன்று தரப்­பி­னரும் அதி­க­மான வகையில் பெண்­க­ளா­கவே இருப்­ப­துடன் அவர்­க­ளது அடிப்­படை உரி­மைகள் முற்று முழு­தாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர்.
சிங்­களக் கிரா­மங்­க­ளையும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிள்­ளை­க­ளையும் மாத்­தி­ரமே குறி வைத்­துள்ள ஆடை உற்­பத்­தி­யா­ளர்கள் விலை கொடுத்து கால்­ந­டை­களைப் பிடித்து வரு­வது போன்றே யுவ­தி­களைப் பிடித்து வரு­கின்­றனர்.

பெருந்­தோட்டப் பகு­தி­களில் குடி­கொண்­டுள்ள வறுமை, வரு­மானக் குறைவு, போக்­கு­வ­ரத்து வச­தி­யீனம் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­களால் பாட­சாலை இடை விலகல் சாதா­ரண தரத்­துக்கு மேல் செல்ல முடி­யாத நிலை ஆகி­யவை குவிந்து காணப்­ப­டு­கின்ற நிலை இன்­னுமே இருந்து வரு­கின்­றது.
இவ்­வா­றான நிலையில் ஆடை உற்­பத்தி நிறு­வ­னங்­களைச் சேர்ந்த அதி­கா­ரிகள் தக­வல்­களைத் திரட்­டிக்­கொண்டு நேர­டி­யாக குறித்த பிர­தே­சங்­க­ளுக்கு சென்று அங்கு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளான பெற்­றோ­ரையும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளையும் மிக அழ­காக மூளைச் சலவை செய்து விடு­கின்­றனர்.
மூளைச் சலவை செய்­யப்­ப­டு­கின்ற தோட்டத் தொழி­லாளப் பெற்றோர் தமது பிள்­ளை­களை அனுப்பி வைப்­ப­தற்கும் இணங்­கு­கின்­றனர். இவ்­வாறு அழைத்து வரப்­ப­டு­கின்றோர் தலை­ந­கரில் அல்­லது நகரப் பிர­தே­சங்­களில் அல்­லது வர்த்­தக வல­யங்­களில் அமை­யப்­பெற்­றுள்ள ஆடைத் தொழிற்­சா­லை­களில் இணைந்து கொள்­கின்­றனர்.
இவ்­வாறு ஆடைத் தொழிற்­சா­லையை நம்பி வரு­கின்ற யுவ­தி­களின் பாது­காப்பு, தங்­கு­மிட வச­திகள், போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட விட­யங்கள் தொழில் தரு­நர்­க­ளுக்கு இரண்டாம் பட்­ச­மா­கவே இருந்து வரு­கி­றது. இன்னும் கூறப்­போனால் இவை தொடர்­பான அக்­கறை இவர்­க­ளுக்கு கிடை­யாது.

காலை 7.50 மணிக்கு ஆடைத் தொழிற்­சா­லையின் நுழை­வா­யி­லுக்குள் காலடி வைக்­கின்ற மேற்­படி யுவ­திகள் இரவு 8.00 மணி­வ­ரை­யி­லான 12 மணி நேரம் தொழிலில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர்.
ஆடைத்­தொ­ழிலில் உத­வி­யா­ள­ராக இணைத்து கொள்­ளப்­ப­டு­கின்ற யுவ­திகள் நூல் பிரித்தல், பொத்­தான்கள் இணைத்தல், ஆடை­களை அடுக்­குதல் உள்­ளிட்ட வேலை­களில் அமர்த்­தப்­ப­டு­வ­துடன் மேற்­படி 12 மணி நேரமும் நின்­ற­ப­டியே தொழில் செய்ய வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.
தைத்த ஆடை­களை மினுக்­கு­வ­தற்­கென்று (அயன் செய்­வ­தற்கு) அமர்த்­தப்­ப­டு­கின்ற யுவ­திகள், இளை­ஞர்கள் இந்த 12 மணி நேரமும் நின்று கொண்டே பணி­யாற்ற வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். அதே­போன்று தைத்தல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­வர்கள் இரவு 8. 00 மணி­வ­ரையில் அமர்ந்­தி­ருந்தே பணி புரிய வேண்­டி­ய­வர்­க­ளா­கின்­றனர்.
தோட்டத் தொழி­லா­ளிகள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் ஆகிய இரு தரப்­பி­ன­ருமே தங்­க­ளது அதி­கா­ரி­க­ளாலும் எஜ­மா­னி­க­ளாலும் இழி­வாக பேசப்­ப­டு­வது போன்று ஆடைத் ­தொ­ழிலில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்ற யுவ­தி­களும் அதி­கா­ரி­களால் மேற்­பார்­வை­யாளர்­களால் தகாத வார்த்­தை­களால் திட்டி தீர்க்­கப்­ப­டு­கின்ற நிலை­மைகள் உள்­ளன. எனினும் இவை வெளி வரு­வ­தில்லை.

ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் பணி புரியும் யுவ­திகள் அடுத்­த­வ­ரோடு பேசு­வ­தற்கோ சிந்­திப்­ப­தற்கோ தடை விதிக்­கப்­ப­டு­கி­றது.சில சந்­தர்ப்­பங்­களில் சுக­யீனம் கார­ண­மாக வேலைக்கு செல்­லாத பட்­சத்தில் தங்­கி­யி­ருக்கும் வீடு அல்­லது விடுதி தேடி வந்து அழைத்து செல்­லப்­ப­டு­கின்­றனர். கடு­மை­யான சுக­யீனம் என்­றாலும் தொழிலில் ஈடு­பட முடி­யாத நிலை­யென்­றாலும் அவை கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாது கட்­டாய வேலையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர்.
தேவைப்­படும் நேரத்தில் விடு­மு­றை­யொன்றை வழங்­கு­வதும் ஆடைத்­தொ­ழிற்­றுறையில் தடை செய்­யப்­பட்ட விட­ய­மாக இருக்­கின்­றது.தொழிற்­சா­லைக்குள் எழு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்பில் முறைப்­பா­டு­களை ஏற்­ப­தற்கோ அல்­லது அவற்றை தீர்ப்­ப­தற்கோ இங்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வது கிடை­யாது. ஆடைத்­தொ­ழிற்­சாலை உரி­மை­யா­ளர்­களை பொறுத்­த­வ­ரையில் உழைப்பு உறிஞ்­சப்­ப­டு­தலே பிர­தா­ன­மா­கின்­றது.
மறு­பு­றத்தில் உற்­பத்தி கேள்­விகள் அதி­க­ரிக்கும் கால கட்­டங்­களில் காலை 8.00 மணி முதல் மறுநாள் அதி­காலை 2.00 மணி­வ­ரை­யிலும் வேலை வாங்­கப்­ப­டு­கின்­றது. அதி­காலை 2.00 மணி­ய­ளவில் வீடு திரும்பும் அல்­லது விடுதி திரும்பும் இவ் யுவ­திகள் மீண்டும் காலை 7.30 மணிக்கு தொழிற்­சா­லையில் நிற்றல் வேண்டும்.இத்­தனை துன்­பங்கள் துய­ரங்கள் உழைப்பு எனும் பெயரில் பிழிந்­தெ­டுத்­தல்கள் தொடர்பில் பேசு­வ­தற்கு எவ­ரு­மில்லை.
இன்று ஆடைத்­தொழில் என்­றதும் இத்­து­றையை தூக்கி நிறுத்தும் தூண்­க­ளாக மலை­ய­கத்தை சேர்ந்த யுவ­தி­களும் பெரும் பங்­கினை வகித்து கொண்­டி­ருக்­கின்­றனர்.ஆனாலும் இவர்­க­ளது அடிப்­படை உரி­மைகள், மனித உரி­மைகள் தொடர்பில் அலட்­டிக்­கொள்­ளா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்குள் நடப்­பது என்ன ?என்­பது பற்­றியோ அங்­குள்ள நிலை­மைகள் தொடர்­பிலோ எந்த தக­வலும் வெளி­வ­ரு­வ­தில்லை.
தொழில் அமைச்சு, அர­சாங்கம், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள், மனித உரிமை அமைப்­புக்கள், சமூக நலன் சார் அமைப்­புக்கள், கட்­டா­ய­மாக ஆடைத்­தொ­ழிற்­சாலை நிலை­வ­ரங்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.
அப்­பாவி பெற்றோர் தமது பிள்­ளைகள் தொழில் செய்­வ­தாக எண்­ணிக்­கொண்­டி­ருக்க அவர்­க­ளது பிள்­ளைகள் படும் துன்­பங்­களை அறி­வ­தற்கு அவர்­க­ளுக்கு வாய்ப்­பில்லை.
மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள், என்று வாய்­கி­ழிய கத்­து­ப­வர்கள் ஆடைத்­தொ­ழிற்­சா­லை­க­ளுக்குள் தொழில் புரிந்து பிழி­யப்­ப­டு­கின்ற மலை­யக பெருந்­தோட்­டப்­பு­றங்­களைச் சேர்ந்த யுவ­திகள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தினால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆறு­த­லாக இருக்கும்.

தோட்டத் தொழி­லா­ளர்­களைப் பற்­றிய உண்மை நிலை­பற்றி பாரா­ளு­மன்­றத்தில் வாய் திறக்­கா­தி­ருக்கும் மலை­யக பிர­தி­நி­திகள் ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்குள் முடக்­கப்­பட்­டி­ருக்கும் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் பிள்­ளை­க­ளைப்­பற்றி சிந்­தித்­துப்­பார்க்­கின்­ற­னரா என்­பதே கேள்­வி­யாக உள்­ளது.
தேர்தல் காலங்­களில் இவ்­வாறு ஆடைத் தொழிற்­சா­லை­களில் தொழில் புரியும் யுவ­தி­களின் வாக்­கு­களை எதிர்­பார்க்­கின்ற தலை­மைகள், அர­சி­யல்­வா­திகள் அவர்­க­ளது நிலை­மைகள், எதிர்­காலம் குறித்து மெள­னி­க­ளா­கவே இருக்­கின்­றனர். இவர்கள் மீது பரா­மு­க­மாக இருக்­கின்­றனர்.
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளிடம் தோட்ட நிர்­வா­கங்கள் எவ்­வாறு உழைப்­பினை உறிஞ்­சு­கின்­ற­னவோ அதே­போன்றே அவர்­க­ளது பிள்­ளை­க­ளிடம் இருந்து ஆடைத்­தொ­ழிற்­சாலை நிரு­வா­கங்­களும் உழைப்­பினை உறிஞ்சிக் கொண்­டி­ருக்­கின்­றன.
இந்­நி­லை­மைதான் இவ்­வாறு இருக்­கி­ற­தென்றால் ஆடைத்­தொ­ழிற்­சா­லை­களில் பணி புரியும் யுவ­தி­களை இவ்­வாறு தோட்­டப்­ப­கு­தியில் இருந்து நகர்ப்­பு­றங்­க­ளுக்கு தொழி­லுக்கு வந்­துள்ள இளை­ஞர்கள் விட்டு வைப்­ப­தில்லை. தமது பிள்ளை தலை­ந­கரில் தொழில் செய்­வ­தாக பெற்றோர் நினைத்­துக்­கொண்­டி­ருக்க அதே பிள்ளை தலை­ந­கரில் யாரோ ஒரு இளை­ஞனின் கையைப்­பி­டித்துக் கொண்டு கண்ணீர் வடித்து அழுது நிற்கும் காட்­சி­களும் இருக்­கின்­றன.
தொழி­லுக்கே உரிய வயது வராத சிறுமிகளை மூளைச்சலவை செய்து ஆடைத்தொழிற்சாலைக்கு அழைத்து வரும் நிறுவன அதிகாரிகளாலேயே இந்த நிலைமை உருவாகின்றது.
ஆறு நாட்களும் கார்மென்டிற்குள் (ஆடைத்தொழிற்சாலை ) அடைத்து வைக்கப்படுகின்ற யுவதிகள் ஞாயிறு தினங்களில் சற்று வெளியில் செல்வதென்றால் அங்கு இளைஞர்களின் கெடுபிடிகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் விரும்பியோ பல சந்தர்ப்பங்களில் விரும்பாமலோ மேற்படி யுவதிகள் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. இத்தகைய நிலைமைகள் தொடர்பில் தொழில் தரு நிறுவனங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிற அதேவேளை பெற்றோரே விழிப்படைய வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களை தோட்ட நிர்வாகிகள் எப்படி நடத்துகின்றனரோ அதேபோன்று தான் ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில் புரியும் யுவதிகளும் தொழில் தருநர்களால் நடத்தப்படுகின்றனர்.

எனவே தலைநகர் உட்பட நகர்ப்புறங்களில் ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்பிலும் அங்கு இளைஞர், யுவதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் கண்டறிவதற்கு தொழில் அமைச்சு முனைய வேண்டும். ஏற்றுமதித் துறையூடாக வருமானத்தை ஈட்டித்தருகின்ற ஆடைத்தொழில் தொழிலாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிகள் எந்தளவு தாக்கத்தை செலுத்துகின்றனர் என்றும் அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும


Post a Comment

0 Comments