Subscribe Us

header ads

தாஜ்­ம­காலை சிவன் கோவி­லாக அறி­விக்கக் கோரிய வழக்கில் மத்­திய அர­சுக்கு ஆக்ரா நீதி­மன்றம் நோட்டீஸ் அனுப்­பி­யுள்­ளது.


தாஜ்­ம­காலை சிவன் கோவி­லாக அறி­விக்கக் கோரிய வழக்கில் மத்­திய அர­சுக்கு ஆக்ரா நீதி­மன்றம் நோட்டீஸ் அனுப்­பி­யுள்­ளது.
ஆக்­ராவில் அமைந்­துள்ள உலக அதி­ச­யங்­களில் ஒன்­றான தாஜ்­ம­காலை சிவன் கோவி­லாக அறி­விக்க வேண்டும் எனக்­கூறி வழக்­க­றிஞர் ஹரி­சங்கர் ஜெயின் தலை­மையில் 6 வழக்­க­றி­ஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தனர்.
இந்த மனு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதை விசா­ரித்த நீதி­பதி, இது­கு­றித்து மே மாதம் 5 ஆம் திக­திக்குள் பதி­ல­ளிக்­கு­மாறு மத்­திய அரசு, கலா­சார அமைச்­சகம், உள்­துறை செய­லாளர் மற்றும் இந்­திய தொல்­பொருள் ஆய்­வுத்­து­றைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்­த­ர­விட்­ட­தோடு, அடுத்த கட்ட விசாரணையை மே 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Post a Comment

0 Comments