Subscribe Us

header ads

வலைப்பந்தாட்ட பயிற்றுநர் தேர்வுப் பரீட்சை


இலங்கை வலைப்­பந்­தாட்ட அணிக்கு தேர்ச்சி பெற்ற பயிற்­று­நர்­களை இலங்கை வலை­ப்பந்­தாட்ட சம்­மே­ளனம் தெரிவு செய்­ய­வுள்­ளது. இதனை முன்­னிட்டு தகு­தி­வாய்ந்­தவர் களி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

பின்­களம், மத்­திய களம், கோல் போடும் நுட்­பத்­திறன் ஆகிய நுட்­பங்­களில் தேர்ச்சி பெற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம் என சம்­மே­ள­னத்தின் இடைக்­கால நிர்­வாக சபை விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் உடற்­கூற்று பயிற்­று­நர்­க­ளி­ட­மி­ருந்தும் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.
அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­னியில் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள 16 நாடு­க­ளுக்கு இடை­யி­லான உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை அணிக்கு பயிற்­று­நர்­களைத் தெரிவு செய்ய சம்­மே­ளனம் தீர்­மா­னித்­துள்­ளது. உரிய தரா­த­ரங்­களைக் கொண்ட பயிற்­றுநர் தங்­க­ளது விண்­ணப்­பங்­களை செய­லாளர், இடைக்­கால நிர்­வாக சபை, இலங்கை வலைப்­பந்­தாட்ட சம்­மே­ளனம், இல. 33 டொரிங்டன் ப்ளேஸ், கொழும்பு –7 என்ற முக­வ­ரிக்கு ஏப்ரல் 18ஆம் திக­திக்கு முன்னர் அனுப்பி வைக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளனர்.
உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னிட்டு இலங்கை வலை­ப்பந்­தாட்ட அணிக்கு அதி சிறந்த வீராங்­க­னை­களைத் தெரிவு செய்­வ­தற்­கான திற­மை­சா­லி­களை இனங்­காணும் தேடல் நிகழ்­வுகள் நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன.
வட மாகா­ணத்­திற்­கான தேர்­வுகள் யாழ்ப்­பாணம் வேம்­படி மகளிர் கல்­லூரி மைதா­னத்தில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை 11ஆம் திகதி காலை 7.30 மணி முதல் தேர்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன.
வட மாகா­ணத்தில் ஐந்து மாவட்­டங்­க­ளி­லு­மி­ருந்தும் உய­ர­மான சிறந்த வலை­ப்பந்­தாட்ட வீராங்­க­னை­களை இத் தேர்வில் கலந்­து­கொள்ள வருகை தரு­மாறு இலங்கை வலைப்­பந்­தாட்ட
சம்­மே­ளன இடைக்கால நிர்வாகசபை கோரியுள்ளது.

இதேவேளை கண்டி, காலி, பொலன்னறுவை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 18ஆம் திகதியும் கொழும்பு மாவட்டத்தில் 19ஆம் திகதியும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

Post a Comment

0 Comments