முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை இதுவரை அறியவில்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் சர்வாதிகாரத்தை நோக்கி சென்றமையே அவரின் தோல்விக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை புகழ்ந்து மகாராஜா என்ற பாடல் எழுதப்பட்டது.
அவர் வாகனத்தில் பயணிக்கு போது அந்த பாடலை கேட்பார். வாகனத்தை ஓட்டும் சாரதிகளும், தாம் மிகவும் விரும்பிக்கேட்கும் பாடல் இதுதான் என்று கூறுவார்கள்.
எமது நாட்டில் உள்ள சில முட்டாள்கள் கூட்டமே, மக்கள் மத்தியில் வசிகரம் பெற்ற மற்றும் நாங்கள் உறவு பாராட்டிய அரசியல்வாதியான மகிந்த ராஜபக்சவை, மகாராஜாவாக மாற்றியது என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments