கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்ததைப் போன்று ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடத்தவில்லை என்றால் தங்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய சில அரசியல் கட்சிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments