Subscribe Us

header ads

புலம்­பெயர் தமி­ழர்கள் தொடர்­பான ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் நிலைப்­பாடு


புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் தாரா­ள­மாக நாட்­டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முத­லீ­டு­க­ளையோ வியா­பா­ரத்­தையோ மேற்­கொள்­வ­துடன் சுதந்­தி­ர­மாக வாழமுடியும். புலம்­பெயர் தமிழர்கள் எம்­முடன் இணைந்து வாழ்­வ­தையே விரும்­பு­கின்­றனர். அவர்­க­ளது சந்­தே­கத்தைப் போக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­ பின்னர் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மாளி­கையில் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள் மற்றும் பத்தி­ரி­கை­களின் பிர­தம ஆசி­ரி­யர்­களை சந்­தித்து ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது தனது லண்டன் விஜயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த அவர், புலம்­பெ­யர்ந்த தமிழர் அமைப்­பி­ன­ருடன் தான் லண்­டனில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும் அவர்கள் அர­சாங்­கத்­துடன் இணைந்து பணி­யாற்றி பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண தயா­ராக இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.
லண்­டனில் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­களின் பல அமைப்­புக்கள் உள்­ளன. நான் இம்­முறை விஜ­யத்­தின்­போது சில அமைப்­பி­ன­ருடன் பேச்­சுக்­களை நடத்­தினேன். ஈழம் கோரும் புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்­க­ளுடன் நான் பேச­வில்லை. அவர்­க­ளுடன் பேச­வேண்­டிய அவ­சி­யமும் எனக்­கில்லை. நான் சந்­தித்த புலம்­பெயர் தமி­ழர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் சிங்­க­ளத்தில் என்­னுடன் உரை­யா­டினர். எம்மை புலம்­பெயர் தமி­ழர்கள் என்று முத்­திரை குத்­த­வேண்டாம். நாம் உங்­க­ளுடன் சேர்ந்து செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம்.
முன்னர் இருந்த இலங்­கையின் தலை­வர்கள் எம்­முடன் பேச­வில்லை. பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். நாட்­டுக்கு வரவும் நாம் தயா­ராக இருக்­கின்றோம் என்று அவர்கள் என்­னிடம் தெரி­வித்­தனர். இந்த விவ­காரம் குறித்து பிர­தமர் மற்றும் அமைச்­ச­ர­வை­யுடன் பேசி உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நான் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கருத்து தெரி­வித்தார்.
இந்தச் சந்­திப்பில் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, புலம்­பெயர் தமிழ் மக்கள் தாரா­ள­மாக நாட்­டுக்கு வரலாம். அவர்கள் வந்து இங்கு முத­லீ­டு­க­ளையும் வியா­பா­ரங்­க­ளையும் மேற்­கொள்­ளலாம். புலம்­பெயர் தமி­ழர்­களை நாட்­டுக்கு வரவ­ழைப்­பதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொள்வோம். அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை நாம் காண்போம் என்றும் கூறினார்.
தற்­போ­தைய நிலையில் ஜனா­தி­ப­தியின் இந்த கருத்­துக்கள் வர­வேற்­கத்­தக்­க­வை­யா­கவே அமைந்­துள்­ளன. கடந்த வாரம் பிரிட்­ட­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரித்­தா­னியா மகா­ரா­ணி­யா­ரையும் அந்­நாட்டின் பிர­தமர் டேவிட் கம­ரூ­னையும் சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்த விஜ­யத்­தின்­போது புலம்­பெயர் தமி­ழர்­களில் 300 பேர் வரையில் ஜனா­தி­ப­திக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து ஆர்ப்­பாட்­ட­மொன்­றிலும் ஈடு­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை நோக்கி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கைய­சைத்த புகைப்­ப­டங்­களும் வெளி­யா­கி­யி­ருந்­தன.
லண்­டனில் யாழ். இந்துக் கல்­லூ­ரியின் பிரித்­தா­னியக் கிளை­யினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தி­ருந்­தனர். இவர்­க­ளை­விட வேறு சில அமைப்பின் பிரதி­நி­தி­களும் ஜனா­தி­ப­தியை சந்­தித்­த­தா­கவே தெரி­கின்­றது. இந்தச் சந்­திப்பின் பின்­ன­ணி­யி­லேயே ஜனா­தி­பதி புலம்­பெயர் தமி­ழர்கள் விட­யத்தில் அக்­கறை செலுத்தும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
ஜனா­தி­பதி இவ்­வாறு கருத்து தெரி­வித்­துள்­ள­ நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் உரை­யாற்­றிய வெளிவிவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் புலம்­பெயர் தமிழர் விவ­காரம் தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். இலங்­­கை­யினால் தடைவிதிக்­கப்­பட்­டுள்ள 16 புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அர­சாங்கம் மீளாய்வு செய்­ய­வுள்­ளது என்று அமைச்சர் கூறி­யுள்ளார்.
கடந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்க காலத்தில் புலம்­பெயர் தமி­ழர்கள் பெரும் சந்­தேகக் கண்கொண்டே பார்க்­கப்­பட்­டனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்­தின்­போது விடு­தலைப்புலிகள் அழிக்­கப்­பட்­ட­போ­திலும் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் மீண்டும் புலிகள் இயக்­கத்தை உரு­வாக்­கு­வதில் கங்­கணம் கட்டி நிற்­ப­தா­கவும் இதனால் புலம்­பெயர் தமி­ழர்கள் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்டும் என்றும் அர­சாங்க தரப்பில் அன்று கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டன.
இத­னை­விட அர­சியல் இலாபம் பெறு­வ­தற்­காக குறிப்­பாக சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெறும் நோக்கில் அர­சாங்­க­மா­னது புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்கள் மீது கடும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யி­ருந்­தது. மீண்டும் புலிகள் இயக்கம் உரு­வா­கி­விடும் என்றும் இதனால் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் விட­யத்தில் தாம் எச்­ச­ரிக்­கை­யாக இருப்­ப­தா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அடிக்­கடி கூறி­வந்­தது.
யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து தமது சொந்த நாட்­டுக்குத் திரும்பி தமது சொந்த இடங்­களைப் பார்­வை­யி­டு­வ­தற்கும் அங்கு வந்து தொழில் முயற்­சி­களை ஆரம்­பிப்­ப­தற்கும் யுத்­த­த்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்கும் புலம்­பெயர் தமிழ் மக்கள் பெரும் விருப்பம் கொண்­டி­ருந்­தனர். ஆனால் அவர்கள் அச்­ச­மின்றி சொந்த நாட்­டுக்கு வந்து திரும்­பிச்­செல்­லக்­கூ­டிய நிலை­மையை கடந்த அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. இருந்­த­போ­திலும், அன்­றைய அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு ஓர­ளவு புலம்­பெயர் தமி­ழர்கள் நாட்­டுக்கு வந்து சிற்­சில செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். ஆனாலும் அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்து நடந்தால் மட்­டுமே இவ்­வா­றான செயற்­பா­டுகள் சாத்­தி­ய­மாக அமைந்­தன.
கடந்த 3 தசாப்­த­ கால யுத்தம் கார­ண­மாக 15 இலட்­சத்­துக்கு மேற்­பட்ட தமிழ் மக்கள் கனடா, அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா உட்­பட ஐரோப்­பிய நாடு­களில் புலம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர். இந்த மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் உண்­மை­யி­லேயே தமது விருப்­பத்தின் அடிப்­ப­டையில் இவ்­வாறு புலம்­பெ­ய­ர­வில்லை. நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த ஆபத்­தான சூழ­லி­லி­ருந்து தம்மை பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவே அவர்கள் புலம்­பெ­யரும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு சென்­ற­வர்கள் நாட்­டுக்குத் திரும்பி சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்கு பேரார்வம் கொண்­டுள்­ளனர்.
இவ்­வாறு புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் நாடு­தி­ரும்­பு­வ­தற்கும் அவர்கள் நாட்டின் வளர்ச்­சியில் பங்­கெ­டுப்­ப­தற்­கு­மான சூழல் இனி­யா­வது ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்கும் நடை­முறை பின்­பற்­றப்­பட்­டது. இதன்­மூலம் சில நூற்­றுக்­க­ணக்­கான புலம்­பெயர் தமி­ழர்கள் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையைப் பெற்­றுக்­கொண்­டனர். ஆனால், சில மாதங்­களின் பின்னர் அந்த நடை­முறை பாது­காப்புக் கார­ணங்­களைக் கூறி நிறுத்­தப்­பட்­டது. பாது­காப்புச் செய­லா­ளரின் அனு­மதி பெற்றே இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை பெற­மு­டியும் என்ற சூழல் உரு­வாக்­கப்­பட்­டது. இதனால் நாட்டுக்கு வந்து இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையைப் பெற்று வாழ்­வ­தற்கு விரும்­பிய புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றமே காத்­தி­ருந்­தது. அத்­துடன், இலங்­கைக்கு வரும் புலம்­பெயர் தமி­ழர்­களின் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்த முன்­னைய அர­சாங்கம் தவ­றி­யி­ருந்­தது.
புலம்­பெயர் தமி­ழர்கள் நாடு­தி­ரும்­பி­ய போது கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டனர். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்கள் வட­ப­குதி செல்­வ­தற்கு பயண அனு­மதி பெறும் நிலை காணப்­பட்­டது. புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் நாட்­டுக்கு வந்து உதவி வழங்கத் தயா­ராக இருந்­த­போ­திலும் அவர்­க­ளது மனங்­களில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் தவ­றி­யி­ருந்­தது. இதனால், விருப்­ப­மி­ருந்­தும்­கூட புலம்­பெயர் தமி­ழர்கள் சொந்­த­நாட்டில் காலடி எடுத்­து­வைக்க முடி­யாத நிலை காணப்­பட்­டது.
தற்­போது புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள நிலையில் புலம்­பெயர் தமி­ழர்­களின் விவ­கா­ரத்­துக்கு உரிய தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­ய­து­ அ­வ­சி­ய­மா­ன­தாகும். புலம்­பெயர் தமி­ழர்கள் அனை­வ­ரையும் புலிகள் என்ற கண்­ணோட்­டத்­துடன் பார்க்கும் நடை­முறை இனியாவது மாற­வே­ண்டும். இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்க்­க­மான நிலைப்­பாட்டில் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.
புலம்­பெயர் தமி­ழர்கள் நாடுதிரும்­பு­வ­தற்­கேற்ற ஒழுங்­குகள் செய்­யப்­பட வேண்டும். நாடு­தி­ரும்பும் புலம்­பெயர் தமி­ழர்­களை கைது­செய்­யவோ அவர்­களை துன்­பு­றுத்­தவோ எவரும் முனை­யக்­கூ­டாது. அண்­மையில் பிரான்­ஸி­லி­ருந்து இலங்­கைக்கு வரு­கை­தந்­தி­ருந்த பகீரதி முரு­கேசு என்ற பெண் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். இதேபோல் பத்­துக்கு மேற்­பட்­ட­வர்கள் கைது­செய்­யப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. எனவே, எதிர்­கா­லத்தில் இத்­த­கைய நடை­முறை­களைப் பேணாது புலம்பெயர் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Post a Comment

0 Comments