Subscribe Us

header ads

மஹிந்தவை பிரதமராக்கும் முயற்சிகள் கைவிடப்பட மாட்டாது: உதய கம்மன்பில


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சிகள் கைவிடப்பட மாட்டாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி ரத்தினரபுரியில் மஹிந்தவை பிரதமராக்கும் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதிலும் அமுனுகம நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படுவதனை எதிர்த்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் யாப்பிற்கு முரணான வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நிச்சயமாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான நத்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments