Subscribe Us

header ads

நாளை லண்டனில் மைத்திரி-கெமரூன் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் நல்லிணக்க வேலை திட்டம் தொடர்பாக பிரித்தானியாவின் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் 11ஆம் திகதி பிரித்தானியாவின் 2ஆம் எலிசபெத் மகா ராணியை பகின்ஹெம் மாளிகையில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை புதிய அரசாங்கம் போர்க் குற்ற விசாரணைகளை ஒத்திவைப்பது தொடர்பாக லண்டன் தமிழ் புலம்பெயர்ந்தோர் குற்றம் சுமத்துவதோடு இரு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments